ரிஷி.. தான் செல்வந்தன் என்ற கர்வம் அவனிடத்தில் துளியும் இருக்காது.. ஏன் க்ருஷும் கூட அவ்வாறே.. சத்தியமூர்த்தி மற்றும் சாரதா தங்கள் வீட்டில் வேலை செய்பவர்களையும் தங்களில் ஒருத்தர் போலவே நடத்துவர்.. அதனை பார்த்தே வளர்ந்ததால் என்னவோ சகோதர்கள் இருவரும் எவரிடமும் வேற்றுமை பாராட்டமாட்டர்..
கோயம்புத்தூரின் பிசியான ஏரியாவான சாய்பாபா காலனியில் இருந்த அந்த இரண்டு மாடி கட்டிடம் செயற்கை விளக்குகளால் மின்னின.. கீழ்தளத்தில் க்ருஷின் கைவண்ணத்தில் இருபாலருக்கும் தயாரான பருத்தியாலான நவீன உடைகள் விற்பணைக்கு அணி வகுத்தன.. மேல் தளம் முழுவதும் ப்ரைடல் க்லோத்திங்க் என க்ருஷின் பொட்டிக்கிற்கு இந்த மூன்று ஆண்டுகளில் மக்களிடையே நல்ல வரவேற்ப்பு.
உள்ளே வந்தவன் நேராக க்ருஷின் ப்ரத்யேக டிசைனிங்க் ரூமிற்கு சென்றான்.. அவனது புது லான்சிற்காக சர் அங்கு தான் முக்கால்வாசி நேரம் இருக்கிறார்..
“டேய் குட்டிபயலே வீட்டுக்கு கூட வராம தீயா வேலை செய்யறப் போல” என அவன் முதுகில் ஓங்கி ஓர் அடி வைத்தான்..
கண்ணை மூடி மூண்ட எரிச்சலை அடக்கிவிட்டு.. தமயனை நன்கு முறைத்த க்ருஷ்.. “ஏன் டா வந்த உடனே என்ன எரிச்சல் பண்ணற.. வரைஞ்சிட்டு இருக்கேன்’ல..தெரியலையா உனக்கு..” என பல்லை கடித்தான்..
“சரி சரி சாரி டா.. உன்ன பாத்து ரொம்ப நாள் ஆச்சு’ல அந்த ஆர்வத்துல அடிச்சுட்டேன்.. கோச்சுக்காத..”
ரிஷி இவ்வாறெல்லாம் ஜாலியாக இருக்கும் ரகம் அல்ல.. அதிசயமாக இருந்தது ரிஷிக்கு.. அது மட்டுமில்லாமல் உடனே மன்னிப்பு வேற கேட்கவும் க்ருஷிற்கு உருகிவிட்டது..
“டேய் என்ன சாரிலாம் கேட்டுட்டு.. இது போனா போகுது.. ரஃப் காபி தான்.. புதுசு போட்டுக்கலாம்.. வா நம்ம மேல இருக்கிற பால்கனி போலாம்..”
என இருவரும் பல நாள் பேசாத விஷயங்களை.. தங்களது தொழில் பற்றி எல்லாம் பேசிக்கொள்ள சென்றனர்..
தன் அறையில் இன்னும் துயில் கலையாமல் நல்ல குப்புறப் படுத்து தூங்கிக் கொண்டிடுந்த ஷைலுவின் முதுகில் ஓங்கி இரண்டு அடி இடி என விழ.. பதறி அடித்துக்கொண்டு எழுந்தாள் நம் நாயகி.. அங்கு நம் நாயகியின் அம்மா ருத்ர தாண்டவம் ஆடாத குறையாக முறைத்துக்கொண்டு நிற்க..
“ஏன் விஜி தினம் இப்படியே என்ன பதறி அடிச்சுட்டு எந்திக்க வெச்சினா எப்படி என் நாள் நல்லதா ஆரம்பிக்கும்” என பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு தாயை வம்பிழுக்க..