"ம்ம் சொல்லாம இருக்கணும்னா எனக்கு அப்பப்போ சம்திங் சம்திங் கிடைக்கணும்," என்று சொல்லியப்படியே அவள் இதழ் மீது அவனது இதழை பதித்தான்.
இதழோடு அவர்களது நெருக்கம் நிற்காமல் இன்னும் தொடர்ந்துக் கொண்டிருக்க, திடீரென சுயநினைவு பெற்றவனாய் அவளிடமிருந்து விலகிய கார்த்திக், "எனக்கு கொஞ்சம் முடிக்க வேண்டிய ஆஃபிஸ் வொர்க் இருக்கு, நீ படுத்து தூங்கு. நான் கொஞ்ச நேரத்தில் வரேன்." என்று அலுவலக அறை நோக்கிச் செல்ல, நித்யா அவனது கைப்பிடித்து நிறுத்தினாள்.
அவளை கல்லூரியில் சேர்க்க வேண்டுமென்று சொல்லியதிலிருந்தே அவளிடமிருந்து அவன் விலகி தான் இருக்கிறான். ஆனாலும் இப்படி சில நேரங்களில் தன்னை மீறி அவளுடனான கூடலை அவன் மனம் விரும்பி அவளை நெருங்கும் போது, பின் ஏதோ நினைவு வந்தவனாக அவன் அதிரடியாக விலகும்போது நித்யாவிற்கு அது ஏக்கமாக மாறும்.
அவள் படித்து முடிக்கும் வரை குழந்தை வேண்டாமென்று தள்ளிப் போடுவதில் தவறில்லை. ஆனால் அதற்காக இப்படி இருவரும் விலகியே இருக்க வேண்டுமென்பது இல்லையே, குழந்தை உருவாகாமல் இருக்க பாதுகாப்பு முறைகள் இருக்கும்போது கார்த்திக் ஏன் விலகியே இருக்கிறான்?
நித்யாவின் மனதில் இந்த கேள்வி உதித்தாலும் அவளாக ஏன் இந்த விலகல் மாமா, இதனால் என் படிப்பு எந்தவிதத்திலும் பாதிக்கப்போவதில்லை. நீங்க இப்படி விலகியிருக்க எந்த அவசியமும் இல்லை." என்று அவனிடம் சொல்ல நினைப்பாள்.
ஆனால் மனதை திறந்து அவனிடம் பேச ஆரம்பித்திருந்தாலும், இந்த விஷயத்தில் அவளால் அவனிடம் வெளிப்படையாக பேசமுடியவில்லை. ஒரு பெண்ணாக இந்த விஷயத்தில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நீங்க விலகி செல்வதற்கான அவசியமே இல்லை என்று அவனிடம் நேரடியாக கூற அவளுக்கு தயக்கமாக இருந்தது. அதனால் அவளும் அந்தநேரம் மௌனமாக இருந்துவிடுவாள்.
ஆனால் இன்றும் அப்படி அவளால் மௌனமாக இருக்க முடியாமல், கைப்பிடித்து நிறுத்தியதும் அவளைப் பார்த்தப்படி நின்றிருந்தவனிடம், "எதுக்கு மாமா இப்படி விலகிப் போறீங்க, குழந்தை தானே இப்போதைக்கு வேண்டாம்னு முடிவு செய்திருக்கோம், அதுக்கு எவ்வளவோ பாதுகாப்பு வழிகள் இருக்கப்போ, ஏன் என்கிட்ட இருந்து விலகியே இருக்கீங்க, அதுவும் ஆசையா கிட்ட வந்துட்டு நீங்க விலகிப் போறப்போ ரொம்ப கஷ்டமா இருக்கு.
அம்மா இதை நினைச்சு தான் வீட்டிலிருந்தே படின்னு சொன்னாங்க போல, நானும் காலேஜ் போறேன், படிக்கிறேன்னு உங்களை தவிக்க விட்றேனே? ஆனா இதனால் என்னோட படிப்பு