என்ன பதில் சொல்வதென்று திருதிருவென விழித்தவர், "புருஷன் பொண்டாட்டி உங்க ரெண்டுப்பேர் கூட நான் எதுக்கும்மா, நீங்க மட்டும்னா ஜாலியே பேசி சிரிச்சிட்டு போவீங்கல்ல, அதனால நீங்க மட்டும் போங்க, நான் டிரைவரை கூட்டிட்டு இன்னொரு கார்ல போறேன்." என்று ஒதுங்கப் பார்த்தார்.
"டேய், நித்தி புதுசா கார் ஓட்டக் கத்துக்கிட்டதால அவளோட போக பயம், அதை வெளிய சொல்லாம, புருஷன் பொண்டாட்டிக்கு நடுவில் நான் எதுக்குன்னு சமாளிக்கப் பார்க்கிறீயா? நான் உன் அம்மா டா, எனக்கு உன்னைப்பத்தி தெரியாதா?" என்று குறிஞ்சியம்மாள் உண்மையை போட்டு உடைத்தார்.
"பெரிய மாமா, பாட்டி சொல்றது உண்மையா? உங்களுக்கு என்கூட வர பயமா?" என்று நித்யா அவரிடம் நேரடியாக கேட்க,
"அம்மா சும்மா சொல்றாங்கம்மா," என்று அவர் சமாளிக்கப் பார்த்தார்.
"நித்தி, அப்பாக்கு பயம் தான், குறிஞ்சியம்மாளோட தைரியம் அவங்க பிள்ளைங்க ரெண்டுப்பேருக்கும் இல்ல, அவங்க பேரன் எனக்கு தான் இருக்கு, நானும் பாட்டியும் இன்னைக்கு உன்னோ கோவிலுக்கு வரோம், நீதான் கார் ஓட்ற சரியா?" என்று கார்த்திக் அவளிடம் கேட்க,
"ம்ம் என் பேரன் சரியா தான் சொல்றான். சீக்கிரம் சாப்பிட்டு கிளம்பு கோவிலுக்கு போவோம்," என்றதும் நித்யா உற்சாகமாக கிளம்பத் தயாரானாள்.
மூவரும் கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பினர். போகும் போதும் வரும் போதும் நித்யாவே காரை ஓட்டினாள். அவள் அழகாக கார் ஓட்டுவதைப் பார்த்து குறிஞ்சியம்மாள் பேத்தியை நினைத்து பெருமையாக பேசினார். என்னத்தான் நித்யா காரை ஒழுங்காக ஓட்டினாலும், அவள் முதல்முறை டிராஃபிக் நிறைந்த சாலையில் ஓட்டுவதால் கார்த்திக் அவளோடு செல்ல வேண்டுமென்பதற்காக தான் அவனும் கோவிலுக்குச் சென்றான்.
வீட்டிற்கு வந்ததும் அலுவலகம் செல்ல தயாராகிக் கொண்டிருந்தவன், "சூப்பர் நித்தி, ரொம்ப சீக்கிரமாகவே கார் ஓட்ட கத்துக்கிட்ட, செமயா கார் ஓட்ற, பாட்டிக்கு வேற பேத்தியை நினைச்சு பெருமை தாங்கல, இந்த கிரெடிட்ல்லாம் யாருக்கு? உன்னோட மாமாக்கு தானே, அதுக்கு நீ உன் மாமாவுக்கு என்ன தரப் போற?" என்றுக் கேட்க,
"ம்ம் என்ன வேணும்?" என்று அவள் திருப்பிக் கேட்டாள். அவள் கல்லூரியில் சேர்ந்த போது தாம்பத்ய வாழ்க்கையில் ஒதுங்கியிருந்தவன், அந்த ஈ.சி.ஆர் பயணத்திற்குப் பிறகு அப்படி ஒதுக்கம் காட்டுவதில்லை. அவ்வப்போது அவர்களின் தாம்பத்ய வாழ்க்கையும் இனிமையாக