(Reading time: 12 - 24 minutes)
Verena nee iruppin.. Verethum vendame
Verena nee iruppin.. Verethum vendame

நடக்குமோன்னு நினைச்சா உன்னால எக்ஸாமும் எழுத முடியாது. உனக்கும் பாப்பாவுக்கும் ஆபத்து புரியுதா?

நான் என்ன சொன்னாலும் நீ கேட்பல்ல, தயவுசெஞ்சு இதை கேளு. அதுதான் உனக்கு நல்லது புரியுதா? அதைவிட்டுட்டு இன்னும் இன்னும் நீ குழப்பிக்கிட்டே இருந்தா உனக்கு கஷ்டம். உனக்கு ஒன்னு ஆச்சுன்னா அப்புறம் இந்த உலகத்தில் எனக்குன்னு என்ன இருக்கு? என்று நெகிழ்ச்சியோடு அவன் பேச,

" ஏன் மாமா இப்படில்லாம் பேசறீங்க, பாப்பாக்கு பிரச்சனைன்னு வரும்போது நான் படிப்பை பத்தி யோசிப்பேனா? நீங்க சொல்றது போலவே நான் அதை பெருசா யோசிக்காம இருக்கேன். முடிஞ்சவரை படிக்கிறேன். உங்களுக்காகவும் பாப்பாவுக்காகவும் முடிஞ்ச வரை எதை பத்தியும் யோசிக்காம அமைதியா இருக்கேன். சரியா?" என்று அவள் கேட்க,

"ம்ம் அதுதான் வேணும், இப்படியே எல்லாத்தையும் நீ ஈஸியா எடுத்திக்கிட்டா,  அப்புறம் நீ நல்லப்படியா எக்ஸாமும் எழுத முடியும், பாப்பாவும் நல்லப்படியா பிறக்கும், அதுக்காக மாமா சொல்லிட்டாங்களே அப்போ அது சரியா நடக்கும்னு என்னோட வார்த்தையை நம்பாத, கடவுள்க்கிட்ட பொறுப்பை ஒப்படைச்சிடு. சரியா?" என்று அவனும் பதில் கூற, அவள் தலையாட்டிக் கொண்டாள்.

அவளை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு வெளியே வந்தவன், வஞ்சிக்காக காத்திருக்க ஆரம்பித்தான். சிறிது நேரத்தில் வஞ்சியோடு பாட்டியும் வந்தார்.

அவர்கள் நித்தியை பார்ப்பதற்கு முன்பே பேசி விட வேண்டும் என்று நினைத்து, "அத்தை நித்திக்கிட்ட குழந்தை பிறக்கும் வரை படிக்க வேண்டாம்னு சொன்னீங்களா?" என்றுக் கேட்டான்.

"ஆமாம் கார்த்தி, ரொம்ப கஷ்டப்பட்றா? அதான் குழந்தை பிறந்ததும் படிக்கட்டும்னு சொல்றேன். கேட்டா தானே?" என்று அவர் கவலையோடு சொல்ல,

"அய்யோ அத்தை இது தான் இப்போ அவளோட பிரச்சனைக்கு காரணமே, நீங்க ஏன் அவக்கிட்ட இதெல்லாம் பேசறீங்க?" என்று அவன் கூறினான்.

"என்ன கார்த்தி சொல்ற?" என்று வஞ்சி பயத்தோடு கேட்க,

"பின்ன அவளுக்கு படிக்க ஆசை. இதில் அவங்க ரெண்டுப்பேருமே எதிர்பார்க்காம குழந்தை உண்டாகிடுச்சு. படிப்பை முடிக்க முடியாதான்னு அவளுக்குமே கவலை இருக்கும், இதில் நீ வேற காலேஜூக்கு போக வேண்டாம்னு சொன்னா பிள்ளைக்கு இன்னும் கவலை சேர்ந்திருக்கும், அதான் பிரஷர் ஏறிடுச்சு." என்று குறிஞ்சியம்மாளும் கூறினார்.

"ஆமாம் அத்தை, பாட்டி சொல்றது உண்மை தான், நீங்க இப்படி பேசவும் அதையே மனசுல

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.