(Reading time: 12 - 24 minutes)
Verena nee iruppin.. Verethum vendame
Verena nee iruppin.. Verethum vendame

வச்சு பயந்துக்கிட்டு இருக்கா, அவளுக்கு படிப்பை விடவும் மனசில்ல, குழந்தையும் நல்லப்படியா பெத்துக்கணுமேன்னும் கவலை. இது ரெண்டுமே அவ மனசை அரிக்குது. அதான் பி.பி அதிகமாகிடுச்சு. அவளுக்கா குழந்தை பிறக்கும் வரை படிக்க முடியாம போகிடுமான்னு நினைச்சா அவளே வேண்டாம்னு விட்ருவா, இல்ல முடியும் நினைச்சாலும் அதில் தப்பில்ல, அதைவிட்டு நாம சொன்னா தான் உள்ளுக்குள்ள பயந்து இப்படி பி.பி ஏறிடும், அதனால இனி ஜாக்கிரதையா அவக்கிட்ட பேசுங்க அத்தை." என்று அவன் எச்சரித்தான்.

அவருமே, "இனி அப்படி பேச மாட்டேன் கார்த்தி," என்று கூறினார்.

கார்த்திக் பேசியதை மனதில் நன்றாக நித்யா பதிய வைத்துக் கொண்டாள். இந்த நேரத்தில் முதலில் குழந்தையை நல்லப்படியாக பெற்றெடுப்பதை தான் பார்க்க வேண்டும், படிப்பு இரண்டாவதாக தான் என்பதை புரிந்துக் கொண்டாள். அடுத்து மனதிலிருந்த குழப்பமும் பயமும் நீங்க, ஓரளவிற்கு இரத்த அழுத்தம் குறைந்தது.

இதற்கு மேல் மருத்துவமனையில் இருக்க வேண்டாம், வீட்டிற்கே செல்லலாம், என்று மருத்துவர் கூறிவிட்டார். உணவு முறையில் கட்டுப்பாடும், மனதில் எந்த கவலையும் அண்ட விடாமல் கவனமாக இருந்தால் இரத்த அழுத்தம் இயல்பாகிவிடும் என்று அறிவுரை கூறி அனுப்பினார்.

நித்யாவும் அதை கடைப்பிடிக்க ஆரம்பித்தாள். அதனால் இரத்த அழுத்தமும் இயல்பாகிவிட, வாந்தி மயக்கமெல்லாம் கூட இப்போது அவளை படுத்துவதில்லை. அதனால் அவள் கல்லூரிக்கும் செல்ல ஆரம்பித்தாள். அதுவும் தன் வேலைகளை குறைத்துக் கொண்டு கார்த்திக் தான் அவளை கல்லூரிக்கு இருவேளையும் அழைத்துச் சென்று வந்தான். அதேபோல் வஞ்சியும் பேசுவதில் கவனம் வைத்து, மருத்துவர் சொன்னதை கடைப்பிடித்து உணவுகளை சமைத்துக் கொடுத்தார்.

குழந்தையை மட்டுமே மனதில் வைத்தவள், நன்றாக சாப்பிட்டு, அளவான தூக்கம், தேவையான ஓய்வு, இதற்கு இடைப்பட்ட நேரத்தில் கொஞ்சம் படிப்பு என்று அவளது வாடிக்கையாக எடுத்துக் கொண்டு அதை சரியாக செய்தாள்.

இப்படியே அவள் தேர்வு எழுதும் நாளும் வந்துவிட்டது. ஓரளவிற்கு மதிப்பெண்கள் வாங்குவதற்கு தக்க அளவிற்கு படித்திருந்தாள். அதனால் எப்படி தேர்வு எழுதுவோமோ என்ற பயமே இல்லை. அதாவது பயம் அவள் அருகில் வராத அளவிற்கு பார்த்துக் கொண்டாள். கார்த்திக்கும் உடனிருந்து அவளுக்கு எளிதில் புரியும்படி படிப்பதற்கு உதவினான். அதனால் எந்த பயமும் இல்லாமல் இதுவரை நடந்த தேர்வுகளை எழுதி முடித்திருந்தாள். கார்த்திக்கின் ஊக்கம் தான் அவளை இத்தனையும் செய்ய வைத்தது என்று கூட சொல்லலாம், அப்படி தான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.