அவளும் நினைத்தாள்.
இப்படியிருக்க கடைசி இரண்டு தேர்வு இருக்கும் போது தான் கார்த்திக்கிற்கு ஒரு சின்ன விபத்து நேர்ந்தது. அருகில் வந்த கார் ஓட்டுனரின் கவனக் குறைவால் இவன் காரும் சின்ன விபத்துக்குள்ளாக முன் நெற்றியிலும் கையிலும் அடி, ஆனால் மருத்துவமனையில் சேர்க்கும் போது சுயநினைவோடு தானிருந்தான்.
அதனால் இந்த நேரத்தில் வீட்டில் கூறினால் அனைவருமே பதறுவார்கள். அதிலும் நித்யாவிற்கு இந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியில் ஏதாவது ஆகிவிட்டால்? அதுவும் இன்னும் இரண்டு தேர்வு எழுத வேண்டியிருக்கிறதே என்பதை யோசித்தவன், தந்தைக்கு மட்டும் அழைத்து விஷயத்தைக் கூறி மருத்துவமனைக்கு வரச் சொல்ல, அவரே பதறியடித்து தான் ஓடி வந்தார்.
நல்லவேளையாக உடம்பில் வெளிக்காயம் மட்டும் தான், இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்தால் போதும் என்று கூறினர்.
இப்போதைக்கு வீட்டில் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கார்த்திக் தன் தந்தையிடம் கூறிவிட்டான். தெரிந்தால் பாட்டி, வஞ்சி இருவருமே பதறுவார்கள். அவர்கள் பதட்டத்தில் நித்யா இன்னுமே பயந்து விடுவாள் என்று கூற ஞானசெல்வமும் அதை ஆமோதித்தார்.
வீட்டில் மூவரிடமும் ஒரு முக்கிய வேலை வந்துவிட்டதால் கார்த்திக் வெளியூர் சென்றிருப்பதாக ஞானசெல்வம் கூற, "தேர்வு முடியும் வரையே இப்படி கார்த்திக் மாமா வெளியூர் போறதெல்லாம் தள்ளி வச்சுடுவாங்களே, அப்படியிருக்க இப்போ எப்படி?" என்று நித்யா குழம்ப,
பெரிய அடி இல்லை என்பதால் நன்றாக பேச முடிந்த கார்த்திக் அவள் நம்பும்படியாக அலைபேசியில் பேசியவன், அவளுக்கு அலைபேசி மூலமாகவே ஊக்கம் கொடுத்து தேர்வுக்கு அனுப்பி வைத்தான். அடுத்து மறுநாள் அவளுக்கு விடுமுறை இருக்க, அந்த இரவும் மருத்துவமனையிலேயே கழித்தவன், அதற்கு அடுத்த நாள் தேர்வுக்கு சென்றவளை அலைபேசியில் பேசி அனுப்பிய பின்னர் தான் வீடு வந்தான்.
அவனை தலையில் போட்டிருந்த கட்டோடு பார்த்ததுமே குறிஞ்சியம்மாளும் வஞ்சியும் பதறினர். ஏன் சொல்லவில்லை என்று கோபமும் கொண்டனர். நித்யாவை அவன் காரணமாக கூறிய பின் தான் அவர்களும் புரிந்துக் கொண்டு அமைதியாகினர்.
பின் அவனை அறையில் சென்று ஓய்வெடுக்க சொல்லி அனுப்பினர். நித்யா இந்த கட்டோடு பார்த்தால் பதறுவாளோ என்ற பயம் இருக்க, குறிஞ்சியம்மாள் பக்குவமாக அவளுக்கு எடுத்து சொல்லி அனுப்புவாதாக அவனுக்கு சொல்லி அறைக்கு அனுப்பி வைக்க, அதேபோல்