(Reading time: 12 - 24 minutes)
Verena nee iruppin.. Verethum vendame
Verena nee iruppin.. Verethum vendame

நித்யாவிடமும் பக்குவமாக கூறியும் அவள் பயந்து பதட்டத்தோடு கார்த்திக்கை காணச் சென்றாள்.

"நித்தி மெதுவா போ.நீ பயப்பட்ற மாதிரி கார்த்திக்கு ஒன்னுமில்ல, இந்த நேரத்தில் பதறக் கூடாது." என்று குறிஞ்சியம்மாள் சத்தமாக கூறினாலும் அவள் கேட்காமல் வேகமாக கார்த்திக்கை காணச் சென்றாள்.

அறைக்குள்ளே நுழைந்ததுமே தலையில் கட்டோடு படுத்திருந்தவனை பார்த்து இன்னும் பதறி, "மாமா," என்று சத்தமாக அழைத்தப்படி அவன் அருகில் செல்ல,

அவள் குரல் கேட்டு எழுந்து அமர்ந்தவன், "நித்தி மெதுவா," என்று சொல்ல,

அருகில் வந்தவள், "எதுக்கு மாமா என்கிட்ட சொல்லல?" என்றுக் கேட்க,

"ம்ம் இப்படி பதறினா? அதுக்கு தான், ஏற்கனவே இப்போ தான் கொஞ்சம் நார்மலா இருக்க, இதில் எக்சாம் வச்சிக்கிட்டு இருக்க, ஆக்ஸிடெண்ட் நடந்ததை சொன்னா உன்னோட உடம்புக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா என்ன செய்ய? அதுவுமில்லாம எனக்கு பெருசா ஒன்னுமில்ல, இந்த கட்டை இன்னும் ரெண்டு நாளில் எடுத்துடலாம்னு டாக்டர் சொன்னாரு. நீங்கல்லாம் பதறுவீங்க இப்பவே எடுத்து பேண்டேஜ் போட்டு விடுங்கன்னு கூட சொன்னேன். ஆனா இரண்டு நாள் தானேன்னு சொல்லி அனுப்பிவிட்டுட்டாரு. பார்த்த உடனே எப்படி பதறிட்ட பாரு," என்று அவன் ஆறுதல் கூறினான்.

"நிஜமாகவே ஒன்னுமில்லல்ல மாமா," என்று இன்னும் பயம் தெளியாதவளாக் கேட்க,

"ஒன்னுமில்லடா, வேணும்னா கட்டை பிரிச்சு காட்டட்டுமா?" என்றுக் கேட்க,

"அய்யோ வேண்டாம் மாமா, காயம் ஆற தானே கட்டுப் போட்ருக்காங்க, அதை பிரிக்க வேணாம், நான் நம்பறேன். கடவுள் நமக்கு பெருசா ஏதும் ஆக விட மாட்டாரு." என்று அவளே அவனுக்கு ஆறுதல் கூறினாள்.

"சரி எக்ஸாம் ஒழுங்கா எழுதினியா?" என்று அவன் கேட்க,

"ம்ம் நல்லா தான் மாமா செய்தேன். எல்லாம் உங்களால் தான் மாமா. இப்படி அடிபட்டிருக்கும் போது கூட எனக்காக யோசிக்கிறீங்க பார்த்தீங்களா? எனக்கு எல்லா விஷயத்திலும் ஆணி வேரா இருந்து என்னை வளர விட்டுருக்கீங்க, நீங்க என்னோட வாழ்க்கையில் கிடைச்சது எனக்கு பெரிய அதிர்ஷ்டம் மாமா, இதுக்கு உங்களுக்கு நான் திருப்பி என்ன செய்யப் போறேன்னு தெரியல, ஐ லவ் யூ மாமா." என்று நெகிழ்ச்சியோடு பேச,

"எனக்கு நீ என்ன செய்யணும், நல்லப்படியா குழந்தை பிறந்து நீங்க நல்லப்படியா வீட்டுக்கு வந்தா போதும்," என்று தான் அப்போது அவன் நினைத்தான்.

பதின்வயதானாலும் தாயின் இழப்பு அவனுக்கு பெருந்துயரமாக இருந்தது. அதேபோல்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.