தந்தையும் மனைவியின் இழப்பில் மீண்டு வர எத்தனை சிரம்பப்பட்டார் என்று பார்த்துக் கொண்டு தானே இருந்தான். மீண்டும் அப்படி ஒரு இழப்பு அவனுக்கு வரவே கூடாதென்று நித்யா மருத்துவமனையில் இருந்த போதே பயத்தோடு தான் இருந்தான். ஆனாலும் அந்த பயத்தை அவன் வெளிக்காட்டவில்லை. மனதிற்குள் இப்போதும் தாயும் சேயும் நல்லமுறையில் வீடு வர வேண்டுமென்ற பிரார்த்தனை தான் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.
இப்போதும் வெளிக்காட்டாமல், "அப்பா என்னோட பொண்டாட்டியை ஐ லவ் யூ சொல்ல வைக்க, இப்படி அடிபடல்லாம் வேண்டியிருக்கு," என்று அவன் விளையாட்டாக சொல்ல,
"என்ன மாமா இது, இல்லன்னாலும் சொல்வேன் ஐ லவ் யூ. இனி நீங்க கேட்டாலும் கேட்கலன்னாலும் அடிக்கடி சொல்வேன்." என்று அவன் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள்.
கார்த்திக் பயந்தது போல் இல்லாமல் நல்லமுறையில் நித்யாவின் வளைகாப்பு நடந்து மருத்துவர் சொன்ன தேதிக்கு மூன்று நாட்கள் முன்னரே வலி வந்து அவள் சுகப் பிரசவத்தில் ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுத்தாள்.
மயக்கம் தெளிந்தவளிடம் கார்த்திக் குழந்தையை காட்ட, அதை தொட்டு மகிழ்ந்து குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டி நிறைவாக உணர்ந்தாள்.
"நித்தி இந்த நேரத்தில் இன்னொரு சந்தோஷமான செய்தி, உன்னோட எக்ஸாம் ரிசல்ட் வந்துடுச்சு, நீ பர்ஸ்ட் க்ளாஸ்ல பாஸ் செஞ்சிருக்க, பாப்பாக்கு ஒரு வயசு ஆகற வரை காத்திரு. அப்புறம் நீ மேலப் படிக்கலாம் சரியா?" என்று சொல்ல,
"நீங்க கூட இருக்கும்போது எனக்கென்ன குறை மாமா, இப்போ என்னோட பேருக்கு பின்னால ஒரு டிகிரி வரப்போகுதுன்னா அதுக்கு காரணம் நீங்க தான், உங்களுக்கு நான் என்ன செய்யப் போறேன்னு தெரியலையே?" என்று மீண்டும் அதே வார்த்தையை அவள் கூற,
"இதோ இந்த பரிசை தான் கொடுத்திருக்கியே," என்று குழந்தையை அவளிடம் காட்டியவன், "நீங்க ரெண்டுப்பேரும் எப்போதும் என்னோட இருந்தா போதும், அதை விட வேற எனக்கு என்ன வேண்டும்?" என்று அவன் சொல்ல,
"ஐ லவ் யூ மாமா," என்று காதலோடு அவனை பார்த்து கூறினாள்.
இதுவரை இந்த கதையைப் படித்து கருத்துக்களை பகிர்ந்துக் கொண்ட வாசக தோழமைகளுக்கு நன்றி.
சுபம்