இருந்த துப்பாக்கி அவள் கையிலிருந்து தவறி கீழே விழுந்தது
மூர்த்தி இந்தா ஷீ வாங்க நீ பாத்துக்கோ என அவனை மூர்த்தியிடம் தள்ளி விட்டான் தேவேஸ்வர்
ஏய் தேவேஸ்வர் நீ என்ன பண்றன்னு தெரிஞ்சி தான் பண்றியா எனக்கு மட்டும் எதாவுது ஆச்சுன்னு என் ப்ரதர் லீ வாங் உன்ன சும்மா விட மாட்டான்டா தெரிஞ்சிக்கோ என ஷீ வாங் நீ அடிபட்ட வலியோடு கோவமாக பேச
ஏய் ஏய் ஷீ வாங் நீ சொன்னதெல்லாம் கேட்டு நான் பயந்து போயி உன்கிட்ட அடிமையா நாயா இருப்பேன்னு நிமைச்சியடா நவேர்....இந்த தேவேஸ்வர் ஆட்ட படுறவன் இல்லடா ஆட்டி வைகுரவன் தெரிஞ்சிக்கோ லீ வாங் இல்ல எவன் வந்தாலும் என்ன ஒன்னும் பண்ண முடியாது என் நிழல கூட கண்டுபிடிக்க முடியாது போடா என தேவேஸ்வர் திமிராக பேசி கொண்டிருக்கும் மோது தன்னை பிடித்து இருந்த மூர்த்தியின் முகத்தை தன் தலையை வைத்து பின்னால் ஓங்கி முட்டினான் ஷீ வாங்
அவன் அடித்த அடியில் மூர்த்தியின் மூக்கில் இருந்து ரத்தம் சொட்டியது பின் தன் சாக்ஸ்சில் ஒலித்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மூர்த்தியை சுட தொடங்கினான் ஷீ வாங் இவை நடந்து கொண்டிருக்கும் போது தன்னை நோக்கி வந்த தேவேஸ்வரை தன் பக்கத்திலிருந்த பூந்ததொட்டியை எடுத்து அவன் தலை மேல் தூக்கி போட்டு உடைத்தால் சாரா
பெரிய கல் ஒன்று தலையில் விழுந்தது போல் பூந்தொட்டியில் எடையின் வலியை தாங்க முடியாத தேவேஸ்வர்க்கு தலை சுத்த ஆரம்பித்தது மூளையின் நரம்புகள் துண்டிதது போல அவன் கண்கள் சிவந்து கலக்கமாகி அவன் முன்னிருந்த உருவங்களெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்தன அவனை அடித்த வேகத்தில் அங்கிருந்து ஓடினாள் சாரா ஷீ வாங் கிடம் இருந்து தப்பிக்க படிகட்டிலிருந்து வேக வேகமாக ஓடிய மூர்த்தி வீட்டை விட்டு தோட்டத்திற்கு சென்றான்.
என்ன இந்த வயர் போய்ட்டே இருக்கு டைம் காட் லேண்ட் லைன் கடச்சிருச்சு என ரிசீவரை எடுத்து வேத் காதில் வைத்த போது அது வேலை செய்யவில்லை நான் நினைச்சேன் இதனால் தான் டவர் நெட்டு சிக்னல்ன்னு எதுவும் கடைகள ஏய் கிரிஷ் சரி பண்ணிட்டியா என வேத் ஆண்டென்னாவை சரி செய்து கொண்டிருக்கும் க்ரிஷை பார்த்து கேட்க
எனக்கு தெரியல வேத் மழை போர்ஸ்ச பெய்யுறதுனால என்னால இத செட் பண்ண முடியல நாம பேசாம உள்ள போய் பாக்கலமா என கிரிஷ் சொல்ல
இல்ல வேத் மன்வீர் போலீஸ் க்கு கால் பண்ணிட்டு தான் உள்ள வரணும்ன்னு சொல்லிட்டு போயிருக்கான் நாமளும் உள்ள போய் மாடிக்கிட்டோம்னா அப்பறம் இங்க என்ன நடந்துச்சு