திருமணத்திற்கான நல்ல நாளை பார்க்கச் சொன்னார்.
“என்கிட்டே ஜாதகம் இருக்கு .நான்தானே பொருத்தம் பார்த்தேன். கல்யாணத்துக்கு நல்ல மூகூர்த்த நாள் பார்த்து சொல்றேன்” என பதில் அனுப்பினார்.
அதற்குள் பத்மினி “பெண்ணை பாத்துட்டுதான் சாப்பிடுவேன் சொல்லிட்டீங்க . . பெண்ணும் பாத்தாச்சு சம்மதமும் சொல்லியாச்சு. இனி சாப்பிடலாமே” என்று
சொஜ்ஜி பஜ்ஜி எனப் பல பதார்த்தங்களைக் கொண்டு வந்தாள். சாரதாவும் சாவித்திரியும் உடன் உதவினார்.
கமகம வாசனை மூக்கை துளைக்க போண்டாவிற்கு தாத்தா கை நீண்டது “ என் பொன்னான வோட்டு போண்டாவிற்கே” என எடுத்தார்
“ நாங்கலாம் மரியாதையா சாப்பிடுவோம்” பாட்டி சொஜ்ஜியை எடுத்தார். அதில் முந்திரி நெய்யில் நீச்சலடித்தது.
பாட்டியின் சொல் புரியாமல் “என்ன?” என்பது போலத் தாத்தா அவரை பார்க்க ” ஆமா பஜ் . . . ஜி., சொஜ் . . . ஜி மரியாதையா ஜி இருக்கு . . . உங்க போன் . . டா மரியாதை இல்ல . . . வெரி பேட்” பாட்டி விடாது பொழிந்தார்.
“ரெண்டு பேரும் மொக்க போடாம சாப்பிடுங்க” சஞ்சய் அவர்கள் காதை கடித்தான்.
ராமகிருஷ்ணன் கூட “ஏன்பா மானத்த வாங்குற” கண்ணால் கெஞ்சினான்.
அனைவரையும் ஒரு லுக் விட்ட தாத்தா “ இங்க என்ன இன்டர்வியூகா வந்திருக்கீங்க? உம்முன்னு உட்கார்ந்துட்டு. நல்லா ஜாலியா பேசி சிரிங்க” என்றார்.
பிருந்தா அண்ணண் மூர்த்திக்கு எப்படி ரியாக்ட் செய்வது என்றே தெரியவில்லை. தொடக்கத்திலிருந்தே அடக்கி வாசித்தான். தன் தங்கை வாழப்போகும் இடம். எதையாவது உளறி பிரச்சனை ஆகக்கூடாது எனப் பார்த்துப்பார்த்துப் பேசினான். இன்னும் தந்தை கூட ஆகவில்லை ஆனால் திருமணம் நடத்தும் பெரிய பொறுப்பு அவன் தலையில் சுமத்தப்பட்டது.
ஆனால் தாத்தாவும் பாட்டியும் வந்த நொடி முதல் கலாட்டாதான். எல்லா பாலும் சிக்ஸர் அடித்தார்கள்.
தனுஷ் கண்கள் அவ்வப்பொழுது பிருந்தா அறை பக்கம் சென்றதைக் கவனித்த சஞ்சய் “அண்ணிய கூப்பிடச் சொல்லவா?” மெதுவாகக் கண்ணடித்து வினவ “சும்மாயிருடா” தனுஷ் வெட்கத்தை அடக்கி தம்பியை அதட்டினான்.
இங்கும் அங்குமாய் அலைந்து திரிந்து வேலைச் செய்த சௌமியை தாத்தாவிற்கு மிகவும் பிடித்துப் போயிற்று.
அவளை அழைத்து “நீ பிருந்தா தங்கை தானே? . . உன் பேரு என்னம்மா? . . வா இப்படி