தொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 10 - ஜெபமலர்
எதற்காக அழைத்தார்கள் என்று தேவி யோசிக்க அவளுக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் பரத்திற்கு எதுவோ ஒன்று சரியில்லை என புரிந்தது.
தேவியின் மனது படபடவென அடித்துக் கொள்ள நகங்களை கடித்தாள். அதை பார்த்த பரத் அவளை கடிந்து கொண்டான். இதென்ன சிறுபிள்ளை போல இப்படி செய்கிறாய் என்றான்.
சிறுவயதிலிருந்தே அதிக பதட்டமாக இருக்கும்போது நகம் கடிப்பது அவளது பழக்கம். அவளது தந்தையும் அடிக்கடி இந்த விஷயத்திற்காக கடிந்து கொள்வது வழக்கம்.
பரத் அதைப்போலவே பேச அவளுக்கு தந்தை நினைவு வந்தது. அவரது பாசமும் அக்கறையும் நினைவிற்கு வர கண்கள் கலங்கியது. அதோடு அவர் பேசிய கடைசி வார்த்தைகள் நினைவுக்
...
This story is now available on Chillzee KiMo.
...
காபி குடித்து நேரத்தை கழிக்க விருப்பம் இல்லாமல் கொஞ்சம் லேட்டாகட்டும் என்று சொல்லிவிட்டு மீண்டும் அப்பா என்றான்.
அவன் அவசரத்தை உணர்ந்து ராஜேந்திரன் அதற்குமேல் காலதாமதம் செய்யாமல் பரத்