சொல்லு என்ன விஷயம்
இன்னும் அந்த பொண்ண கண்டுபிடிக்கல...
யூஸ்லெஸ் பெல்லோஸ்... எட்டு வருஷமா ஒரு ஆளை தேடிக்கிட்டு இருக்கானுங்க. இவனுங்களை தூக்கிட்டு உருப்படியா வேற யாரையாவது போடணும்.
பாஸ்
ம்ம்ம்... அந்த தூத்துக்குடி காரன் கிட்ட போன் போட்டு பேசினியா... ஏதாவது தகவல் தெரிந்ததா...
பேசினேன் பாஸ். நாம சொல்ற மாதிரி எந்த ஒரு பாடியும் கரை ஒதுங்கல என்று அந்த ஊர் மக்கள் சொல்றாங்களாம் பாஸ்...
டேய்.. அந்த முட்டாள் பயலுகளா கடற்கரையோரம் இருக்கிற எல்லா இடத்திலேயும் திரும்ப தேட சொல்லு. நிச்சயம் அந்த பாடி கரை ஒதுங்கி இருக்கும். தூத்துக்குடி மாவட்டத்தை தாண்டி அது எங்கேயும் போய் இருக்காது. அந்த கிராமத்துல இருக்குற ஒவ்வொரு வீட்டிலும் போய் விசாரிக்க சொல்லு. எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை. எனக்கு அந்த பாடி வேண்டும். இல்லை என்றால் அந்த ஆள் வேண்டும்.
சீக்கிரம் கண்டுபிடி. நம்மகிட்ட நேரமில்லை என்று சொல்லிவிட்டு வெளியேறினான் அந்த பாஸ்.
தொடரும்