(Reading time: 11 - 21 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

தொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை  மறந்தறியேன்! - 11 - சாகம்பரி குமார்

ஞ்சன் காரை ஓட்டிக் கொண்டிருந்தான். அவனுடைய அருகில் அமர்ந்திருந்த சத்யன்   ரஞ்சனை பார்ப்பதும் அலைபேசியை பார்ப்பதுமாக  இருந்தான். காரை ஓட்டி கொண்டே..

"என்னிடம் ஏதோ பேச விரும்புகிறாயோ?" என்று ரஞ்சன் கேட்டான்.

"ஆமாம். ஆனால் அதை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை."

"ஒருவேளை அது ரேச்சல் பற்றிய விஷயமாக இருந்தால்…. நீ ஆரம்பிக்கவே வேண்டாம்"

"என்னை பற்றி நீ என்ன நினைச்சுட்டு இருக்கிறாய்ஏதோ ஒரு தாட்நான் அவளை பத்தி யோசிச்சுட்டு இருந்தேன். அவளோட ஆக்டிவிட்டீஸ் பெக்யூலியரா இருக்குன்னு யோசிச்சேன். பேபி ஆக்ஷன்ஸ் நிறைய இருக்குஅவள் இன்னும் வளரவேயில்லை... "

"சில சமயங்களில்  ஒரு ஸ்ட்ரெஸ்ஸில் இருந்து வெளி வருபவர்கள் இது போல சைல்டிஷா நடந்துப்பாங்கன்னு சொல்வாங்க. பை த பைநீ இதை சொல்லத்தான் நினைத்தாயா?"

"நோநோஅது வேற விஷயம்மீராவை பற்றியது…"

"ஓஹ்இந்த கடுமையான வேலை பளு இருக்கும் கால கட்டத்திலேயும் உனக்கு மீராவுடைய ஞாபகம் இருப்பது ஆச்சரியம்தான்."

"வேலை பளுன்னால்"

"ஒவ்வொருத்தர் வளர்ந்துட்டாங்களா இல்லையானு ஆராய்ச்சி செய்யவே உனக்கு  நேரம் பத்தாது."

"ஷட்அப்நீ இப்படி பேசக் கூடாது ரஞ்சன். என்னுடைய மீராவை நான் எப்போதும் நினைத்துக் கொண்டுதான் இருக்கிறேன்."

"ஓகேஎன்ன விஷயம்னு சொல்லு"

"நாம் அன்னிக்கு வீட்டுக்கு போனபோது எனக்கு ஒரு ஃபைல் கிடைச்சுதுஅது மீராவின் மெடிக்கல் ரிப்போர்ட்.." என்று ஆரம்பித்து முழு விவரங்களையும் விளக்கினான்.

"மை காட்அதனாலதான் மீரா உன்னை விட்டு விலக நினைத்தாளா..?"

"அப்படித்தான் எனக்கும் தோன்றுகிறது.."

"அந்த ரிப்போர்ட்டை நான் பார்க்கணும்"

"யெஸ் ரஞ்சன்நீ ஒருமுறை தெளிவாக  படித்து விட்டால் நல்லது." டாஷ் போர்டை திறந்து அவனிடம் ஒரு பிங்க் நிற ஃபைலை காட்டினான்.

"நீ ஃப்ரியாக இருக்கும்போது படிச்சு பார்"

"அலுவலகம் போனதும் படிச்சிட்டு உன்னிடம் பேசுகிறேன்"

"சரி.."

"அது உண்மை என்றால் மீரா காணாமல் போய்  ஆறு மாதங்களாகி விட்டனவே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.