நர்ஸ் தந்த ஃபைலை பார்த்து விட்டு,
"பார்த்தீங்களா, நான் சொன்னது சரிதான். மீராவிற்கு சாதாரண பிரச்சினைதான். அதற்கு அவளுக்கு மருந்து அளித்து விட்டோம். இந்த ரிப்போர்ட் எப்படி தயார் ஆனது என்று எனக்கு தெரியவில்லையே"
"என்ன டாக்டர் சொல்கிறீர்கள்… மீராவிற்கு இதுபோன்ற பிரச்சினையே இல்லையா?"
"ஆமாம் அவளுக்கு வந்த தலைவலிக்கு காரணம் பொதுவாகவே குழந்தை பிறந்த பெண்களுக்கு வரக்கூடிய ஸ்ட்ரெஸ் மட்டுமே. அதனை சரிசெய்வதற்கான மருந்துகளையும் தந்துவிட்டேன். இது போலியான ரிப்போர்ட்…"
"இந்த ஃபைலில் உங்களுடைய மருத்துமனையின் விவரங்கள் இருக்கின்றன…"
"அந்த ஃபைலின் முகப்பில் உள்ள விவரங்கள் சரிதான். அந்த ஐடி எண்ணும் மீராவின் பதிவெண்தான். ஆனால் உள்ளே இருக்கும் விவரங்கள்தான் தவறு. யாரோ இதை மாற்றி செய்திருக்கிறார்கள்."
"எப்படி இப்படி நடக்கும். உங்களுடைய கையெழுத்து வேற இருக்கு…" ரஞ்சன் கேட்க..
"நோயாளியிடம் நாங்க தந்த பிறகு மாறி இருக்கலாம். மோர் ஒவர் இது என்னுடைய கையெழுத்து இல்லை. என னுடைய கையெழுத்தில் கடைசியில் நான்கு ஸ்பைக் வரும்… இதில் ஆறு வருகிறது… யாரோ மோசடி செய்திருக்கலாம்."
"நீங்க மீராவிடம்தான் இதை தந்தீர்களா…?. ப்ளீஸ் யோசிச்சு சொல்லுங்க" சத்யன் கேட்டான்.
"ம்… எனக்கு நல்லா நினைவிருக்கு. மீராவின் அம்மாவிடம்தான் சொன்னேன். அவங்கதான் இங்கே அடிக்கடி வருவாங்க. அவங்களை நல்லா தெரியும். அன்னிக்கு மீரா இங்கு வரவில்லை. பேபிக்கு வேக்ஸின் போட போயிருந்தாள்".
"நீங்க மீராவிடம் ஏன் சொல்லவில்லை"
"இது சாதாரண விசயம்தான். சிக்கலானதாக இருந்தால் சொல்லியிருப்பேன். மீராவின் அம்மாவிடம் இதுபற்றி விளக்கி இருக்கிறேன்."
எதையோ பேச வாய் திறந்த ரஞ்சனை கையமர்த்தி விட்டு,
"தேங்க் யூ டாக்டர். இது என்ன என்று நான் விசாரிச்சுக்கறேன்" ரஞ்சனை அழைத்துக் கொண்டு வெளியேறினான்.
காரில் ஏறியதும்…
"இது பெரிய மோசடி… அடுத்து என்ன செய்யணும்?" ரஞ்சன் கேட்க,
"வீடீடுக்கு போகலாம். அமைதியாக இதைப்பற்றி டிஸ்கஸ் செய்யணும்." முகம் கடினமுற சத்யன் கூறினான்.