என்று பாடல் வரிகள் கேட்டது.
" இது மீராவின் குரல் போலவே இருக்கிறது" என்று ரஞ்சன் ஆச்சரியப்பட்டான்.
"அது மீராவின் குரல் அல்ல அப்படியே பாடகி சித்ரா மேடமின் குரல் இப்படி காப்பியடித்து பாடுவது யார் என்று எனக்கு தெரியும்… ரேச்சல்!... அவளுக்கு இருக்கும் திறமைகளில் இதுவும் ஒன்று. உண்மையை சொல்லப்போனால் மீராவுக்கும் அவளுக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை இது மட்டும்தான்."
"ஓ… அருமையான குரல்பா.." ரஞ்சன் பேசிக் கொண்டே எட்டி பார்த்தான்.
"அங்கே ஒரு மாமரம் இருக்குல்ல… அந்த கிளையில் ஏறி உட்கார்ந்துட்டுதான் பாடுகிறாள். அது அவளுடைய மீட்டிங் பாயின்ட்… அவளோட பாய்பிரெண்ட் எடியோட இருப்பாள்."என்று விருப்பு வெறுப்பற்ற குரலில் விளக்கினான்.
எட்டிப்பார்த்த ரஞ்சன்,
"ஆமாம் நீ சொன்னது சரிதான். ரேச்சலதான் இருக்கிறாள். ஆனால் தனியாகத்தான் இருக்கிறாள்"
"சரி இப்ப நீ காரை எடு. வீட்டுக்கு போவோம்" என்று சத்யன் கடுகடுத்தான்.
ரஞ்சன் காரை ஓட்டிக் கொண்டிருக்க…
'அந்த ஜெமி நேத்துதான் வந்தான். அதுக்குள்ள கையில மோதிரம் போட்டாச்சு… சிறை வாழ்ந்தவங்க ஜாமின்ல வந்துட்டாங்களாம்… உயிர்… தயிர்னு ரசிச்சு வேற பாடுகிறாள். ஆனாலும் அந்த ஜிப்ஸி பாய்க்கு இவள் வழியறது கொஞ்சம் ஓவர்தான்.' மனதிற்குள் சத்யன் கடுகடுத்து கொண்டிருந்தான்.
தொடரும்
Next episode will be published on 11th Aug. This series is updated weekly on Tuesday evenings.