யோசித்துப் பார்த்தவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.
“என்ன குடிக்காம கையிலேயே வச்சிருக்கே? நான் வாங்கி ஊட்டிவிடனும்னு நினைக்கறியா?”
அவன் கேட்டதுதான் தாமதம் தனக்குப் பிடித்த ஜூசின் ருசியே உணர விரும்பாதவளாய் கடகடவென்று குடித்து முடித்துவிட்டு தம்ளரை மேசை மீது வைத்தாள்.
“குட். இப்படித்தான் சொன்ன பேச்சைக் கேட்டுக்கிட்டு சமர்த்தா இருக்கனும். இப்ப பேசாமல் வீட்டுக்குப் போறே. கல்யாணம் முடிகிற வரைக்கும் தத்துபித்துன்னு உளராமல் நல்ல பிள்ளையா இருக்கே. கல்யாணத்துக்குப் பிறகு உன்னைக் கவனிக்க வேண்டிய விதத்தில் உன்னைக் கவனிச்சுக்கிறேன். இப்பக் கிளம்பு.” என்றான் அவளுக்கு அனுமதி கொடுப்பது போல்.
அவன் பேச்சில் அவள் உள்ளுக்குள் குளிரை உணர்ந்தாள்.
‘கல்யாணத்திற்குப் பிறகு கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்துக்கொள்வானாமே? என்ன செய்வான்?’
யோசனையுடேனே வெளியில் வந்தாள்.
“சாரி மேடம். முதல்ல நீங்க யாருன்னு தெரியாமல் உங்களை உட்கார வச்சுட்டேன். அப்புறம் சார்தான் சிசிடிவி பார்த்துட்டு போன் பண்ணாங்க. நீங்க உங்களை யாருன்னு சொல்லாமல் வைத்தியம் பார்க்க வந்ததா சொன்னீங்கன்னு சொன்னேன். என்னோட வேலையில் தொந்தரவு பண்ண வேண்டாம்னு தான் அப்படி சொல்லியிருக்கா. நானும் அவள் விருப்பத்தையே பாலோ பண்றேன். அவ உள்ளே வந்ததும் நீ இரண்டு மாதுளை ஜூஸ் ஐஸ் போடாமல் கொண்டு வா. ஐஸ் போட்டால் அவ சாப்பிட மாட்டாள் என்றார் மேடம்.” என்றாள் படபடப்புடன்.
தன்னை அவள் தவறாக எண்ணிவிடுவாளோ என்ற பதட்டம் அவளிடம் இருப்பதைக் கண்ட மகாலட்சுமிக்கு ஒரு மாதிரியானது.
அவள் மாதவனின் வருங்கால மனைவி என்றுதானே அவள் இத்தனை பதட்டப்படுகிறாள்.
“அவர் சொன்னது சரிதான்மா. பேசண்ட்சை கவனிக்கிறதுதான் முக்கியம். அதனால்தான் நான் அவர் ப்ரீயான உடனே பார்த்துக்கலாம்னு வெயிட் பண்ணேன். நீங்க ஒன்றும் பதட்டப்படவேண்டாம். நீங்க உங்க வேலையைத்தான் செய்தீங்க.”
அவளின் தன்மையான பேச்சைக் கேட்ட அந்த வரவேற்பு பெண் மகிழ்ந்துபோனாள்.
“உங்களைப் பத்தி கேள்விப்பட்டிருக்கேன் மேடம். உங்க பேர்தான் தெரியும். உங்க போட்டோவை பார்த்ததில்லை. அதனால்தான் உங்களை எனக்குத் தெரியலை.”
“பரவாயில்லை. நான் இப்பக் கிளம்பவா?”
அவளிடம் சொல்லிக் கொண்டு வெளியில் வந்தவள் தன் காரில் அமர்ந்தாள்.
எதிலிருந்தோ தப்பித்து வந்தது போல் இருந்தது. ஒருவேளை அவனுடன் திருமணம் நடந்தால் தினம்