மலர்ந்த முகத்துடன் வரவேற்ற மகளைக் கண்டு வளர்மதி மகிழ்ந்துபோனாள். ராஜசேகரும் அவளின் அழைப்பில் மகிழ்ந்துபோனார்.
“வாம்மா. நல்லாருக்கியா?”
“நல்லாருக்கேன் சித்தப்பா? வீட்டில் எல்லாரும் நல்லாருக்காங்களா?”
“இருக்காங்கம்மா.”
“அவங்களையும் அழைச்சுட்டு வந்திருக்கலாமே சித்தப்பா?”
உரிமையுடன் பேசும் அவளைக் கண்டு புன்னகைத்தார்.
“எங்கேம்மா போயிடப்போறாங்க. உங்க கல்யாணம் முடிஞ்ச பிறகு போக வரத்தானே இருக்கனும்.”
ஏற்கனவே அவருக்கு குடிப்பதற்கு காபி கொண்டு வந்து கொடுத்திருந்தாள் வளர்மதி. வீட்டில் அவள் அப்பாவோ சித்தப்பாக்களோ இல்லை.
“நான் போய் தாத்தாவைப் பார்த்துட்டு வர்றேன்மா. நீ கொஞ்சம் இரு. உன்கிட்ட பேசனும்.” என்றவர் வளர்மதியைப் பார்த்தார்.
“அவ உங்க வீட்டுப் பொண்ணு. அவகிட்ட தாராளமா பேசுங்க. லட்சுமி. சித்தப்பா தாத்தாவைப் பார்த்துட்டு வந்த பிறகு தோட்டத்துக்கு அழைச்சுட்டுப் போ.”
“சரிம்மா.”
ராஜசேகர் கந்தசாமியை சென்று பார்த்துவிட்டு வந்தார். ஏற்கனவே வளர்மதி சொல்லிவிட்டுச் சென்றுவிட்டதால் இருவரும் தோட்டத்திற்குச் சென்றனர். அங்கிருந்த சிமெண்ட் பலகையில் அமர்ந்தனர்.
ராஜசேகர் பேச வந்துவிட்டாலும் தயங்கிக் கொண்டு அமர்ந்திருந்தார்.
“என்கிட்ட என்ன சொல்லனும். தயங்காமல் சொல்லுங்க சித்தப்பா.”
“உனக்கு மாதவனை பிடிச்சிருக்காம்மா?”
அவர் இப்படி கேட்பார் என்று அவள் யோசிக்கவேயில்லை. அவள் வீட்டில் உள்ளவர்கள் கேட்காத கேள்வியை அவர் கேட்கிறார்.
“என்ன சித்தப்பா திடீர்னு இந்தக் கேள்வி?”
அவள் தன் கேள்விக்குப் பதில் சொல்லாமல் எதிர்கேள்வி கேட்டதை அவர் மனம் குறித்துக்கொண்டது.
“உனக்குப் பிடிக்கலையாம்மா?” அவர் முகத்தில் வருத்தம் தோன்றியது.
“சித்தப்பா உங்ககிட்ட சொல்றதுக்கென்ன? நான் அவர் கூட பேசிப் பழகியதில்லை. அதனால் எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை. ஆனால் வீட்டில் உள்ளவங்களுக்கு எல்லாம் அவரை ரொம்ப பிடிச்சிருக்கு. அதனால்தானே அவரை எனக்கு மாப்பிள்ளையா தேர்ந்தெடுத்திருக்காங்க.” என்று அவர்