(Reading time: 8 - 15 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

அப்படியே நிமிடங்கள் கரைய... குயிலி , பனி அதிகமாக பெய்யுது. வா உள்ளே போகலாம் என்று சொல்ல அவள் மறுப்பு ஏதும் கூறாமல் அவனை தொடர்ந்து போய் கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.

தொலைத்த நினைவுகளை குறித்த தெளிவு இல்லாதவளாய் ராகவ் உனக்கு தெரியுமா... என்னுடைய பெயர் குயிலி தான். ஆனால் எப்படி உனக்கு தெரியும் என்று தெரியவில்லை. எனக்கு அம்மா இருந்தார்கள். அவர்களுக்கு நான் சத்தியம் செய்து கொடுத்தேன் என்று தனக்குத் தெரிந்த அனைத்தையும் ராகவ்விடம் கொட்டித் தீர்த்தாள் குயிலி...

அவள் தெளிவான மனநிலையில் இல்லை என்பதை உணர்ந்த ராகவ் அவனை அறியாமலேயே அவளை தன் மார்பில் சாய்த்துக் கொண்டான்.

ஆடவனின் வெற்று மார்பின் இளஞ்சூட்டில் பெண்ணவள் எதை உணர்ந்தாளோ தெரியவில்லை. அனைத்தையும் மறந்து அவனை கட்டி கொண்டு உறங்கி போனாள்.

ஆனால் ராகவ் நிலை தான் கஷ்டமாகி போனது. ஒரு பக்க கையில் வலி, மற்றொரு பக்கமோ பெண்ணவள் முகம் புதைத்து உறங்கி கொண்டு இருக்கிறாள். அவளை எழுப்பவும் தோன்றாமல் உறங்கவும் முடியாமல் அவளை அணைத்த படியே அமர்ந்து கொண்டு இருந்தான் ராகவ்.

அவன் மனமோ சந்தேகத்திற்கும் நம்பிக்கைக்கும் இடையே சிக்கி கதறி கொண்டு இருந்தது.

நான் ஏன் இவளை குயிலி என்று அழைத்தேன். இப்போது இவளோ தன்னை குயிலி என்கிறாள். ஏதேதோ சொல்கிறாள். ஒன்றும் புரியவில்லை.

உண்மையை சொல்லுகிறாளா.. அல்லது இவளே எதையோ கற்பனை செய்து கொண்டாளா... அல்லது என்னை ஏமாற்ற திட்டமிடுகிறளா... மனம் பல கேள்விகளை தொடுக்க எதற்கும் பதில் தெரியாமல் அவளை விலக்கவும் முடியாமல் நேசிக்கவும் முடியாமல் செய்வதறியாது திகைத்து கொண்டு கண் விழித்து காத்திருந்தான் ராகவ் விடியலை நோக்கி.....

தொடரும்

Go to Unakkaagave uyir vazhgiren story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.