(Reading time: 9 - 18 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

வேட்டையாட காத்திருக்கும் புலி போல தங்கள் இடத்திலேயே பதுங்கி இருந்தார்கள்.

ஒருபக்கம் பிரதாபன் ஆட்கள் குயிலியை கண்காணிக்கத் தொடங்கினார்கள்.  குயிலியோ தன் கடந்த காலம் என்ன என்பதை அறிய அதற்கான முயற்சியில் ஈடுபட தொடங்கியிருந்தாள். அவள் தனக்கு எப்போதும் தனக்கு துணை இருப்பான் என்று நம்பி இருந்த ராகவ் அவனது அறையில் லேப்டாப்போடு நேரத்தை செலவழித்து  முடங்கிக் கொண்டான்.

 பிரதாபன் பெர்முடா முக்கோணத்தை அடைவதற்கான நேரத்தை கணித்துக் கொண்டிருந்த பிரசாத் உடன் தன் வேலையில் முழு மூச்சாக ஈடுபட்டு இருந்தான்.

 சத்யாவோ தான் அடுத்து செய்ய வேண்டியது என்ன என்பதற்கான திட்டத்தை தீட்டிக் கொண்டிருந்தான். 

ஆனால் எந்த கவலையும் இல்லாமல் கணினி திரையின் முன்பாக இமைக்க மறந்து விசைப்பலகையோடு விரல்கள் விளையாட கணினியின் திரையோடு தன் விழியை கலக்க விட்டு மனதும் மனதும் பேசும் மௌன மொழி போல தன் அனைத்து மொழிகளையும் கணினியின் திரைக்குள் பதித்துக்கொண்டிருந்தான்.

அவன் சற்றும் எதிர்பாராத நேரமாக உள்ளே வந்தாள் புஷ்பா. ராகவ் என்ன செய்து கொண்டிருக்கிறாய். இன்னும் நீ தூங்க செல்ல வில்லையா என்று அன்பு கலந்த அதிகாரத்தோடு கேட்டாள். அவளது அன்பு ராகவ்வை இழக செய்தது.

 அம்மா... இந்த நேரத்தில் நீங்கள் விழித்திருக்கக் கூடாது என்று நான் எத்தனை முறை சொல்லி இருக்கிறேன். நீங்கள் ஒரு டாக்டர். அப்படி இருந்தும் நீங்களே கவனக்குறைவாக இருந்தால் எப்படி? எனக்கு சில வேலைகள் இருக்கிறது அம்மா... நான் அதை முடிக்க வேண்டும். அதனால்தான் விழித்து இருக்க வேண்டியது ஆகிவிட்டது. இன்னும் ஒரு பத்து நாள் பொறுத்துக் கொள்ளுங்கள். என் வேலை முடிந்துவிடும். நம்முடைய கம்பெனி அடுத்த லெவலுக்கு முன்னேறி இருக்கும்.

 சில நேரங்களில் வாழ்வில் உயர்வு பெறுவதற்காக பல விஷயங்களை இழந்துதான் ஆக வேண்டியிருக்கிறது... அதைப்போலத்தான் இதுவும். என் வெற்றியை அடைவதற்காக சில இரவுகளில் உறக்கத்தை தியாகம் செய்ய வேண்டியது இருக்கிறது என்றான் அவன்.

தியாகம் என்று எதை சொல்கிறான்? குயிலியை பிரிந்ததையா அல்லது உறக்கத்தை தொலைத்ததையா என்று யோசித்த புஷ்பா எதையும் வெளிக்காட்டாமல் தியாகம் செய்வது தவறு அல்ல ராகவ்... ஆனால் நாம் செய்கிற தியாகம் நமக்கு எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது அல்லவா... இரவு வேளையில் இப்படி கண் விழித்து இருப்பது உடலுக்கு நல்லதல்ல. அதனால் நீயும் சீக்கிரமாக படுத்துக்கொள். அதை சொல்வதற்காக தான்

5 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.