மொபைல் திரையை பார்க்காமலேயே மீண்டுமாக தன் விழிகளை கணினியின் திரையில் பதித்துக் கொண்டான்.
அழைப்பு ஓய்ந்தபாடில்லை... மீண்டும் மீண்டுமாக அழைத்துக் கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் வெறுப்பின் உச்சிக்கே சென்றவன் மொபைல் திரையை பார்க்காமலேயே அனைத்து வைத்துவிட்டான்.
கிட்டத்தட்ட பத்து முறை அழைத்தும் பதில் இல்லாமல் போக குயிலிக்கு சற்று பயமாகத்தான் இருந்தது. அவனுக்கு ஏதாவது ஆகி இருக்குமோ என்று பயந்த அவள் அவனுக்கு ஏதும் ஆகியிருக்க கூடாது என்று மனதார கடவுளை வேண்டிக் கொண்டாள்.
மீண்டும் அழைத்து பார்க்க மொபைல் அணைக்கப்பட்ட தகவல் தெரிந்ததும் அவன் அனைத்து விட்டானா? அல்லது சார்ஜர் இல்லாமல் அணைந்து விட்டதா? என்று யோசித்து யோசித்தே குழம்பி போனாள் குயிலி.
ஆனால் அடுத்தநாள் அவள் செய்ய வேண்டிய காரியங்கள்நிறைய இருந்ததால் அனைத்து கவலைகளையும் ஒதுக்கிவிட்டு கண்மூடி படுக்கையில் சாய்ந்தாள். விடியும் பொழுது நல்லதாகவே அமையட்டும் என்ற நல்ல எண்ணத்துடன்.
ஆனால் விடியும் பொழுது என்னென்ன விளையாட்டுகளை விளையாட போகிறது என்று அவள் அறியவில்லை.
தொடரும்