மகாலட்சுமியிடம் மிகவும் ஒட்டிக்கொண்டாள்.
செல்வி குழந்தைகளை தன்னை மம்மி என்றழைக்க பழக்கியிருந்தாள். சின்னவள் குழம்பிப்போய் மம்மா என்றழைத்தது. மகாலட்சுமியையும் மம்மா மம்மா என்றழைக்க, அந்த மழலையின் அன்பில் என்நெகிழ்ந்துபோனாள் மகாலட்சுமி. அவளைக் கண்டாலே மம்மா என்று அவளிடம் தாவினாள் குழந்தை. அதனால் வீட்டில் இருக்கும் நேரம் செல்வி வந்து என்ன செய்தாலும் கண்டு கொள்ளாமல் இருக்க அவளால் முடிந்தது.
அழைப்பு மணி ஒலிக்க கதவைத் திறந்தவளுக்கு வெளியில் நின்றிருந்த அந்த இளைஞனை அடையாளம் தெரியவில்லை.
அவனோ அவளை வெகுவாக தெரிந்த மாதிரி முகம் மலர புன்னகையுடன் நின்றிருந்தான்.
“என்னக்கா முழிக்கறீங்க? நான்தான் மாதவன் அத்தானோட மாமா பையன் பரத்.”
“ஓ. உள்ளே வாங்க.” என்றாள்.
இவன் எப்படியோ? தன் சகோதரி போல் இருப்பானோ? என்ற சந்தேகம் அவளுக்கு.
“அய்யோ அக்கா. என்ன நீங்க என்னை வாங்க போங்கன்னு மரியாதை எல்லாம் கொடுத்துக்கிட்டு? நான் ரொம்ப சின்னவன். என்னை வா போன்னே கூப்பிடுங்க.”
“சரிப்பா பரத். உள்ளே வந்து உட்காரு. சித்தப்பா, சித்தி எல்லாம் நல்லாருக்காங்களா?”
“எல்லாரும் நல்லாருக்காங்க அக்கா. ஆமா அத்தான் இன்னும் வீட்டுக்கு வரலையா?”
“இல்லை. பரத். உனக்கு குடிக்க என்ன கொண்டு வர? டீயா? காபியா?”
“நீங்க எது கொடுத்தாலும் சரிதான்.”
அவன் இயல்பாக பழகியது கண்டு அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது. செல்வி இவனை மாதிரி இல்லை. அவள் என்னவோ விரோதியிடம் பழகுவது போலவே பழகுகிறாள்.
“அக்கா. காபி சூப்பர்.” என்று பாராட்டியவாறே குடித்து முடித்து தம்ளரை வைத்தவன் அவளைப் பார்த்து புன்னகைத்தான்.
“என்ன பரத்?”
“நான் நினைச்ச மாதிரிதான் நீங்க இருக்கீங்க? அதான் சிரித்தேன்.”
“நீ என்ன நினைச்சே?”
“வீட்டில் இருந்து கிளம்பும்போது எங்கம்மா என்னை உங்ககிட்ட ரொம்ப வச்சுக்க வேண்டாம்னு சொன்னாங்க. எல்லாம் என் அக்கா செல்வியோட கைங்கர்யம்தான். அப்பவே நீங்க நல்லவங்களாதான் இருப்பீங்கன்னு நினைச்சேன். அது மாதிரிதான் இருக்கீங்க.”
“உங்கக்கா என்னைப் பத்தி தப்பா சொல்லியும் என்னை நீ நம்பறியா?” அவள் ஆச்சர்யமாகக் கேட்டாள்.
“ஆமாக்கா. சொன்னது யாரு? என்னோட அக்காவாச்சே? அவ யாரைப் பத்தியாவது தப்பா சொன்னால்