நகர்ந்தாள்.
அதுவரை அங்கிருந்த இனிய சூழ்நிலை மாற, எல்லோர் முகத்திலும் இருந்த புன்னகை தொலைந்து போக, தமிழ் செல்வதை கண்ட ராம் அவளின் பின்னால் ஓடினான்.
அறைக்குள் நுழைந்த இலக்கியா கழுத்தில் இருந்த மாலையை கழற்றி சுவற்றில் மாட்டிவிட்டு அங்கிருந்த கட்டிலில் பொத்தென அமர்ந்தாள். அறைக்கதவை திறப்பதை உணர்ந்தவள் கலைவாணியாக இருக்கும் என்ற கோபத்துடன் நிமிர, விசாலம் உள்ளே நுழையவும் கோவத்தை கட்டுப்படுத்தி கொண்டு எழுந்து நின்றாள்.
"கர்ப்பிணி பொண்ணு ஒவ்வொரு தடவையும் என்னை பார்க்கும் பொது எழுந்து நிக்க வேண்டாம். உக்காரும்மா" விசாலம் தணிந்த குரலில் சொல்ல, அதிசயமாக அவரை பார்த்தபடி அமர்ந்தாள் இலக்கியா. அவளின் அருகே அமர்ந்த விசாலம், "இலக்கிய, ஒரு பொண்ணு கர்ப்பமா இருக்கும் பொது அவ சாப்பிடறது மட்டும் குழந்தைக்கு போகாது அவளுடைய எண்ணங்களும் சேர்ந்து தான் போகும். உன் குழந்தையை நல்லபடியா பெத்து எடுக்கணும்னு உனக்கே நம்பிக்கை இல்லாதப்போ அந்த நம்பிக்கை அந்த குழந்தைக்கு எப்படி வரும்? "இப்படி பட்டவ கையாள வளையல் போட்டுக்கணுமா" அப்படினு கேட்டியே? கல்யாணத்துக்கு முன்னாடி வயித்துல குழந்தையோட வந்த இவளுக்கு நான் வளையல் போடணுமான்னு தமிழ் கேட்க எத்தனை நேரம் ஆகும்? வாய் இருக்கற யார் வேணாலும் என்ன வேணாலும் பேசலாம். ஆனா இடம் பொருள் ஏவல் அறிந்து மத்தவங்க மனசு நோக்கமா பேசணும்னா அதுக்கு ஒரு மெச்சுரிட்டி வேணும். பாப்போம். உனக்கு குழந்தை பொறக்குற நேரம் நல்ல நேரமா இருந்து உனக்கு அப்போவாச்சும் அந்த பக்குவம் வருதான்னு. போ, போயி கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடு" என்றவர் அங்கிருந்து நகர, கோபத்தில் பற்களை கடித்தாள் இலக்கியா.
விசாலம் சென்ற சில நிமிடங்களில் எல்லாம் கலைவாணி உள்ளே வர, அதுவரை இருந்த கோபத்தை எல்லாம் அவர் மேல் கொட்டினாள் இலக்கியா.
"வாங்க...அவளுக்கு வக்காலத்து வாங்க அடுத்த ஆள் வந்தாச்சு. உங்களை எல்லாம் பார்த்தா எனக்கு நான் உங்க வயித்துல பொறந்தனா இல்லை அவ பொறந்தாளான்னு சந்தேகம் வருது. அவ எந்த நேரத்துல நம்ம வீட்ல கால் வெச்சாலோ , முதல்ல அண்ணனை முழுங்குனா...இப்போ என்னை..." இலக்கியா சொல்லிமுடிக்கும் முன் கலைவாணியின் அதட்டலில் அவளின் பேச்சு தடை பட்டது.
"இது என்ன வாயா இல்லை தேள் கொடுக்கா? ஒவ்வொரு முறை வாயை திறக்கும் போதும் அந்த பொண்ணை கொட்டிட்டே இருக்க? உன்னை நான் இப்படியா வளர்த்தேன். அண்ணனை கொன்னுட்டா கொன்னுட்டானு அவளை இப்படி திட்டற...அந்த பொண்ணு சொந்தம் பந்தம் சொத்து பத்து படிப்புனு எல்லாத்தையும் விட்டுட்டு நம்ம கூட வந்து இருந்து யாராரோ வீட்ல
Continuosly checking for the updates on every Saturday
Hereafter dnt use chillzee
One of my favourite story. Ever Saturday I look forward for this story... Please update mam
Thank you and take care.