(Reading time: 9 - 17 minutes)
Thoora theriyum megam
Thoora theriyum megam

“சார்...இது ஆபீஸ் பிரச்சினை இல்லை!...பர்ஸனல் பிரச்சினை!” என்றாள் அர்ச்சனா அவர்களிடம் சற்றும் பயமில்லாமல், சற்றும் குரலைத் தணிக்காமல்.

அந்த சீனியர் ஆபீசர்களில் ஒருவன் மாப்பிள்ளைப் பையனைப் பார்த்து, “வாட் ஈஸ் திஸ் பிரபாகர்!” என்று சற்றுக் காட்டமாகக் கேட்க,

அந்த பிரபாகர் திணறினான்.

“ஹலோ...சார்...அதை அவர் கிட்டே ஏன் கேட்கறீங்க?...என் கிட்டக் கேளுங்க...நான் சொல்றேன்!” என்று ஆரம்பித்து, “மிஸ்டர் பிரபாகர் என்கிற பெயருடைய இந்த மாப்பிள்ளைப் பையன் மூணு நாளைக்கு முன்னாடி எங்க வீட்டுக்கு பெண் பார்க்க வந்தார்!...நல்லா சந்தோஷமா நாங்க போட்ட பஜ்ஜி...சொஜ்ஜியெல்லாம் சாப்பிட்டார்...வழக்கம் போல் “போய்த் தகவல் சொல்லியனுப்பறோம்!”னு சொல்லிட்டுப் போனார்!...சொன்னபடியே தகவலும் சொல்லியனுப்பிச்சார்!...ஆனா அந்த தகவல்தான் தப்பான தகவலாய்ப் போச்சு!...எப்படின்னா..?..இவரு பார்க்க வந்த்து என்னோட அக்காவை!...கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சது..என்னைய!...எப்படி சார் இருக்கு இந்த நாடகம்?..” என்று நடந்த கதையை அப்படியே சத்தமாய் அங்கிருக்கும் அனைவருக்கும் கேட்கும்படி ஒப்பித்தாள் அர்ச்சனா.

ஒப்பித்து முடித்ததும், “சொல்லுங்க சார்...இது நியாயமா?...என்னை விடுங்க சார்...எங்க அக்காவை நினைச்சுப் பாருங்க...அவ மனசு எத்தனை ரணமாகியிருக்கும்?...ஒரு பொண்ணு மனசை கொஞ்சம் கூட ஈவு...இரக்கம் இல்லாம காயப்படுத்தி...அதை ரசிக்கறானுகளே...இவனையெல்லாம் எப்படி சார் இந்த பேங்க்ல ஆபீஸரா வெச்சிருக்கீங்க?...இவரு செஞ்சது தப்பா...ரைட்டா?...சொல்லுங்க சார்!” என்று அர்ச்சனா எல்லோர் முகத்தையும் வரிசையாய்ப் பார்த்துக் கேட்டாள்.

பலர் அதைக் கேட்டு தங்கள் தலையை இட, வலமாய் ஆட்டி, “தப்பு..கண்டிப்பா அது தப்பு!” என்று வாய் விட்டே சொல்ல,

சற்றுத் தெம்பான அர்ச்சனா, “சொல்லுங்க சார்...பொண்ணைப் பெத்தவங்க எல்லோரும் பாவப்பட்ட ஜென்மங்களா?...பையனைப் பெத்தவங்க எல்லோரும் சக்கரவர்த்திகளா?...முடிசூடா மன்னர்களா?...ஹூம்...இவனால எங்க வீடு...களையிழந்து போய்க் கிடக்குது சார்!...கல்யாணம் நடக்க வேண்டிய வீடு கருமாதி நடந்த வீடு மாதிரி ஆயிடுச்சு சார்!...எங்க அக்காவை நேருக்கு நேர் பார்த்துப் பேசவே எனக்கு கூச்சமாயிருக்குது சார்!...இந்த மனுஷன் செஞ்ச காரியத்தால ஏதோ நானே அவளுக்கு துரோகம் செஞ்சிட்டது மாதிரி குற்ற உணர்வு என்னை வாட்டுது சார்!”

வங்கி வாடிக்கையாளர்களெல்லாம் தாங்கள் வந்த வேலையை மறந்து விட்டு, இந்தச் சண்டையை வேடிக்கை பார்க்கத் துவங்க,

2 comments

  • Nice epi sir,yaar thavaru seithalum atha sutti kattanum kadipa apa than avangaloda thavara thirumba seiyya matanga.enna than sonnalum silar thirunthave matanga athukaga sollamalum iruka kudathu .Intha mappilai enna pandranu papom .waiting for your next epi

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.