தெரியாது. ஒரு வேளை இந்த உப்பு கிருமி நாசினியாக இல்லாமல் கிருமி பரப்பியாக இருந்து விட போகிறது. அதனால் இந்த விபரீத ஆசைகளை விட்டு விட்டு தீவுக்கு சென்று உதவி கிடைக்கிறதா என்று பார்ப்போம் என்று சொல்ல பிரதாபன் சரி என்று தலை அசைத்தார்.
ஆனால் பிரசாத்தால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. விஞ்ஞானி ஆகிட்டே... செயல் படுத்தி பார்த்து விடுவோம் என்று நினைத்து வெளியே வந்தவர் மீண்டும் தொப்பென்று உள்ளே குதித்து சிறிது மண்ணை அள்ளி கைகளில் பூசினார். பூசிய அடுத்த நொடியே அந்த பகுதி முழுவதும் மறத்து போனது.
பிரதாபன் என் கை மறத்து போய் விட்டது என்று கத்த சரி சரி அதை சரி செய்வோம். தீவுக்குள் வந்து விட்டோம். முதலில் வந்த வேலையை கவனியுங்கள் என்று சொல்ல அவரும் சரி என்று தொடர்ந்து நடக்க சற்று தொலைவில் தெரிந்த ஆள் நடமாட்டம் தெரிந்தது.
பிரதாபன் அங்கு ஒரு ஆள் நிற்கிறார் என்று சொல்லி பிரசாத் சொல்லி முடிப்பதற்குள் அருகில் கிடந்த ஒரு கட்டையை எடுத்து ராகவ்வின் பின் மண்டையில் ஓங்கி அடித்தார் பிரதாபன்.
இதை எதிர்பார்க்காத ராகவ் திரும்பி பிரதாபனை பார்த்தான். அவன் முகத்தில் என்ன தெரிந்ததோ தெரியவில்லை... ராகவ் விழிகள் அவனை உற்று பார்த்துக் கொண்டே மெதுவாக மூட அவன் கால் மடிந்து கீழே விழுந்தான்.
கீழே விழுந்த ராகவ் வின் காலை பிடித்து இழுத்துக்கொண்டே அந்த ஆள் முன் போய் நின்றார்கள் இருவரும்....
இருவரையும் பார்த்த அவர் பிரதாபனை அடையாளம் கண்டு கொண்டார்.. அதிர்ச்சியில் அவர் வாயில் சத்தம் வர மறுக்க உதடுகளோ பிரதாபன் என்று முனங்கியது.
அதற்குள் பின்னால் இருந்து ஒரு பெண் குரல் கேட்டது.. நீ எங்கே இங்கே என்று....
திரும்பி பார்க்காமலே பதில் சொன்னான் பிரதாபன். உன்னுடைய அந்த ஃபார்முலா தான் என்னை இங்கே வர வைத்தது என்றான்.
எங்கள் உயிரே போனாலும் அந்த ஃபார்முலாவை நாங்கள் தரமாட்டோம் ... அதை மட்டுமல்ல இப்போது கண்டு பிடித்து இருக்கும் எதையும் தரமாட்டோம் என்று சொல்லி அங்கு இருந்த வீடு போன்ற பகுதியை நோக்கி அந்த பெண் முன்னேற,. வாழ்ந்து முடித்த உன் உயிரை மட்டும் அல்ல... வாழ வேண்டிய உன் மருமகன் அதான் உன் சகோதரன் மகன் கார்த்திக் உயிரையும் கொடுப்பாயா என்று சொல்லி விட்டு கீழே கிடந்த ராகவ் வை தூக்கி நிறுத்தினான் பிரதாபன்.
அவன் தரையில் இழுத்து வந்ததில் பாதி மயக்கம் தெளிந்து இருக்க நிற்க முடியாமல் சரிந்த அவனை பிரசாத் தாங்கி கொள்ள ராகவ் நெற்றி பொட்டில் கன்னை வைத்தான் பிரதாபன்.
தொடரும்