தொடர்கதை - கனவே கலையாதே.... - 02 - தனுசஜ்ஜீ
அவன் பேசிய விதம் அவளை ஈர்க்க .... மெச்சுதலான பார்வையை அவனை நோக்கி செலுத்தினாள்.
எனக்கும் உங்கள பிடிச்சிருக்கு.
நம்மாளு ஆகாசத்துல மிதக்க ஆரம்பிச்சிட்டாரு, அடுத்த வரி அவள் கூறும் வரை,
பட் காதலால இல்ல ஒரு ஜெண்டில்மேன் - ஆ ரொம்ப புடிச்சிருக்கு.
ஓ.....( ஜார்ஜ் டவுன் ஆயிடுச்சு நம்ம கதிருக்கு)
இவ்ளோ விஷயம் சொன்னிங்களே முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்துட்டீங்களேங்க...
அவன் கேள்விக்குறியாய் அவளை நோக்க...
உங்க பேர் சொல்லவே இல்லையே,
அவன் அசடு வழிந்து கொண்டே கதிரேசன்-ங்க கதிர்-னு கூப்புடுவாங்க.
நைஸ் நேம் கதிர்.நீங்க இவ்ளோ ஓபன் - ஆ சொன்னதால என்னோட காரணத்தையும் நான் ஓப்பனா உங்ககிட்ட சொல்றேன். எனக்கு இருக்கும் ஒரே சொந்தம் அம்மா மட்டும் தான். அப்பா சின்ன வயசிலேயே தவறிவிட்டாங்க. அம்மா அப்பா லவ் மேரேஜ் அதுனால இரண்டு வீட்டு சொந்தக்காரவங்க கூட கனெக்சன் இல்லாமையே போயிடுச்சு. எனக்கு அம்மா அம்மாக்கு நான் இவ்வளவு தான் என்னோட லைஃப் இப்ப வரைக்கும். அம்மாக்கு ஹார்ட்ல பிராப்ளம் இருக்கு. அவுங்கள என்னால தனியா விட முடியாது. இப்ப வரைக்கும் எனக்கு மேரேஜ் பத்தி எந்த எண்ணமும் இல்லை. சின்ன வயசுல இருந்து தனியாக கஷ்டப்பட்டு என்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்த என்னோட அம்மாவை தாண்டி என்னால் எதுவும் யோசிக்க முடியல. ஆனா நான் கல்யாணம் பண்ணிக்கணும் ஒரு முடிவு எடுத்தால் உங்கள நான் கன்செல் பண்றேன் கதிர் சாரி.
அச்சோ இதுக்கு எதுக்குங்க செரி கேக்குறீங்க.நிச்சயமா நான் உங்களுக்காக வெயிட் பண்ணுவேங்க. அதுவரைக்கும் உங்களை நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.
ம்ம்...தேங்க்யூ கதிர் என்ன புரிஞ்சுகிட்டதுக்கு. எனிவே நைஸ் மீட்டிங் யூ என்று அவள் இருக்கையை விட்டு எழ...
ஒரு நிமிஷம்...
அவள் திரும்பி அவனை புரியாமல் பார்த்தாள்.
உங்க பேர்... என்று அவன் இழுக்க..
அவள் சிறு சிரிப்புடன்... பிரியதர்ஷினி.
அவனும் சிரிப்புடன் விடை பெற்றான்.