வேறு வழி இல்லாமல் தர்ஷீ எந்திரிங்க ப்ளீஸ் என்று அவள் கன்னத்தை தட்ட,
லேசாக கண்ணை திறந்தவள். எதிரில் கதிர் முகம் மங்களாக தெரிய..... கண்ணை கசக்கி விட்டு பார்த்தாள். கதிர் முகம் இப்பொழுது தெளிவாக தெரிந்தது.
உடனே எழுந்து அமர்ந்தவள். என்னாச்சு கதிர். டைம் ஆயிடுச்சா.
இல்ல தர்ஷீ. நீங்க கொஞ்ச நேரம் தூங்குங்க. எனக்கு சின்ன ஹெல்ப் உங்க ஃபோன் தரிங்களா. அப்பாக்கு ஒரு கால் பண்ணிட்டு தரேன். என் ஃபோன்ல ஜார்ஜ் இல்ல.
அய்யோ என்ன கதிர் இதுக்குலாம் பர்மிஷன் கேப்பாங்களா.... இந்தாங்க போன்.
தேங்க்யூ தர்ஷீ...... நீங்க தூங்குங்க. உங்க தூக்கத்தை டிஸ்டப் பண்ணிட்டேன் சாரிங்க.
அதெல்லாம் ஒன்னும் இல்ல கதிர். நீங்க போயி ஃபோன் பேசிட்டு வாங்க.
ஓகே தர்ஷீ என்றவன் உடனடியாக அவனுடைய தந்தைக்கு அழைக்க....
மூன்று ரிங்கு சென்றவுடன் எடுத்தவர் அலோ என்க....
அப்பா நான் கதிர் பேசுறேன்.
டேய் எங்கடா போன அந்த புள்ளைய கூட்டிட்டு சொல்லாம கொள்ளாம....என்று அவர் சற்று பதட்டத்தில் கேட்க....
அப்பா சாரிப்பா உங்ககிட்ட சொல்ல மறந்துட்டேன். இங்க தர்ஷினி வீட்லதான் இருக்கோம்பா.
ஏண்டா எதா இருந்தாலும் சொல்லிட்டு போறதில்லையா..... இப்படிதான் சொல்லாம கொள்ளாம போயி பீதிய கிளப்பிவியா........ உங்க அம்மா பயந்து போயிருக்கு. இராத்திரி ஃபுல்லா எத்தனை தடவை போன் பண்றது. உன் போனுக்கு என்ன ஆச்சு.
அதுல சார்ஜ் இல்ல பா... என்று அவன் தயங்கிக்கொண்டே கூற,
சரி அந்த புள்ளய கூட்டிக்கிட்டு வூட்டுக்கு வா.... அங்கன எதுக்கு கூட்டிட்டு போன....
அது சும்மா....... வந்தோம்பா.....
சரி சரி சீக்கிரம் கிளம்பி வெரசா வர பாருங்க.
சரிப்பா.....என்று கூறி போனை வைத்துவிட்டு திரும்ப.....அங்கே தர்ஷினி நின்றுகொண்டிருந்தாள்.
என்னாச்சு கதிர். எதுனா ப்ராப்ளமா....
ஆமா தர்ஷீ. நாம இங்க வந்த விஷயத்தை வீட்ல யாருக்கும் சொல்லவேயில்லை.
என்ன கதிர். இப்புடி சொல்றீங்க. என்னதான் எல்லாரும் தப்பா நினைப்பாங்க.
சேச்சே அப்படியெல்லாம் இல்ல தர்ஷீ. அப்பா ரெண்டு பேரையும் கிளம்பி வீட்டுக்கு தான் வர சொன்னாங்க.