தொடர்கதை - எம் மதமும் சம்மதம் – 05 - விஜேஜி
அன்று நிக்கத், தனலஷ்மியைக் கூட்டிக் கொண்டு கடைக்கு சென்றார், ஜாஃபா், அஜய் வீட்டுக்கு வேண்டியதை வாங்கி தன் மேனஜரின் மேற்பார்வையில் எல்லா ஏற்பாடுகளும் செய்தார்.
மறுநாள் அஜயையும் அவன் நண்பர்களையும் தனது டிரைவரை அனுப்பி கூட்டி வரச் செய்தார் ஜாஃபா்
தனலஷ்மியும் முன்னாடியே வந்து விட்டாள். வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.
அஜயை பாா்பதற்கு மிகவும் ஆவலுடன் காத்திருந்தாள் தனம்,
அவன் நண்பர்களுடன் உள்ளே சிரித்துக் கொண்டும், விளையாடிக் கொண்டும் வந்தான், அவன் அப்பாவின் ஜாடையில் மிகவும் அழகாக இருந்தான்
அவன் அழகையும், அவன் சிரித்து விளையாடும் அழகையும் அள்ளி பருகிக் கொண்டிருந்தாள்.
உள்ளே வந்ததும் எல்லோரும் அவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்னார்கள். ஜாஃபா் அவனிடம் "உனக்கு பிறந்த நாள் பாிசா என்ன வேண்டும் ராஜா?"
"உங்கள என் வாழ்க்கைல அனுப்பி வச்சிருக்காரே அந்த கடவுள், இத விட வேறு என்ன வேண்டும் சொல்லுங்க மாஸ்டா்!"
"ஏம்பா, உனக்கு அம்மாவ கொடுத்தா வேண்டாம்னா சொல்லுவ?"
"மாஸ்டா், என்ன சொலறீங்க......அம்மாவா? எனக்கா?" என்று வாய் தழு தழுக்க கேட்டான்.
தனம் முன்னே வந்தாள் கண்ணீருடன், அவனிடம் மண்டியிட்டு, " என்னை மன்னிப்பியா அஜய்?" என்று கேட்டாள்
"என்ன செய்யற தனம்மா?" என்று நிக்கத் பதறினார்
" இது என்னோட கடமை ஆன்டி!" எனறு கூறினாள, கண்களில் கண்ணீரோடு.
அஜய்க்கு ஒன்றும் புரியவில்லை, அவர்கள் பேசுவதை ஓரளவு புரிந்துக் கொண்டான்
"என்ன செய்யறீங்க? எழுந்திருங்க!" என்றான் அஜய்
" அம்மான்னு சொல்லுப்பா!" என்றார் ஜாஃபா்
அவன் ஜாஃபரை ஒரு பார்வை பார்த்தான்.
அவர் தலையை ஆட்டினார் 'ஆம் எனபது போல், பின் தனத்தை திரும்பிப் பார்த்தான், அவளும் ஆம் என்று தலையசைத்தாள்.
“அம்மா!!"
"என்னை மன்னிப்பியா?" என்று திரும்பி அவனிடம் கேட்டாள்.
"நீ முதல்ல எந்திரி, உன் மகனுக்குதான் பாவம் சேரும்."
“சாி ஆன்டி!" என்று கூறி எழுந்தாள்.
"அம்மா, என்னம்மா இது, மன்னிப்பெல்லாம் கேட்டுகிட்டு, ஏதோ ஒரு காரணம் இருக்கும்