செய்தன.
இமைக்கக் கூட மறந்தவராய் மொத்தத்தையும் பார்த்து முடித்தவர் இறுதியில் முகிலன் உடல் கொத்துப் புரோட்டா போல் குதறப் படுவதைக் கண்டு தன் உத்தியோகத்தையும் மறந்து கண்ணீர் சிந்தினார்.
“வாட் எ ப்ரில்லியண்ட் பாய்?...இப்படி அநியாயமா...கோரமா...செத்துப் போயிட்டானே...”
தன் அழுகையை விழுங்கிக் கொண்ட ராதிகா ஒரு நீண்ட மூக்குறிஞ்சலுக்குப் பின் “அவ்வளவுதான் சார் கவர் ஆகியிருக்கு!” என்றாள் கமறிய குரலில்.
“போதும்மா!” என்றவர் “அப்படியே...இதையெல்லாம் ஒரு “பென்-டிரைவ்”ல காப்பி பண்ணிக் குடுத்துடும்மா..திஸ் ஈஸ் வெரி இம்பார்ட்டெண்ட் மெட்டீரியல் ஃபார் திஸ் கேஸ்!” என்றார்.
“ஓ.கே! சார்” என்ற ராதிகா தனது பர்ஸனல் “பென்-டிரைவ்”ல் அவற்றையெல்லாம் நிரப்பிக் கொடுத்தாள்.
****
அன்று மாலை போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்திருந்த காம்ப்ளக்ஸ் ஓனர் சாம்பசிவம் ஏ.சி.தீனதயாளின் மேசைக்கு எதிரே அமர்ந்து “சார்...அந்த நம்பூதிரி வந்திருக்கார்” என்றார்.
சாம்பசிவத்தின் முதுகுக்குப் பின்னால் தேடிய ஏ.சி. “எங்கே?...யாரையும் காணோமே?” கேட்டார்.
வெளில...கார்ல உட்கார்ந்திருக்கார்”
“அட..உள்ளார வரச் சொல்ல வேண்டியதுதானே?”
“இல்லை சார்!...அதுல ஒரு பிரச்சினை...” இழுத்தார் சாம்பசிவம்.
“சொல்லுங்க சாம்பசிவம்...என்ன பிரச்சினை?”
“வந்து..நம்பூதிரி...போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளாரயெல்லாம் வர மாட்டாராம்!”
மெலிதாய்ச் சிரித்த ஏ.சி.
“அடக் கடவுளே...இப்படியொரு கொள்கையா?” என்று ஆச்சரியப்பட்ட ஏ.சி.தீனதயாள் “சரி...என்ன பண்ணலாம்?..நீங்களே சொல்லுங்க!” சாம்பசிவத்தையே திருப்பிக் கேட்டார் ஏ.சி.
“பேசாம...காம்ப்ளக்ஸுக்கே போயிடலாம் சார்!”
“ம்ம்..ஏதாவது முக்கியமான...அவசர...பிரச்சினையா சாம்பசிவம்?” ஏ.சி.தன் நெற்றியைத் தேய்த்தவாறே கேட்க
“கிட்டத்தட்ட...முக்கியம்தான் சார்!...நம்பூதிரி சில பழைய விஷயங்களைச் சொல்லுறார்...அதெல்லாம்...கிரைம் சம்மந்தப்பட்டிருக்கு!...அதான்..”
“ஓ...அப்படியா?”...ஓ.கே..நீங்க முன்னாடி போங்க...நான் பின்னாடியே வர்றேன்!”
****
இரவு ஏழரை மணி வாக்கில் அந்தக் காம்ப்ளக்ஸின் அலுவல் அறையில் சாம்பசிவம்