ஏ.சி.தீனதயாள் மற்றும் நம்பூதிரி...ஆகிய மூன்று பேர் மட்டும் இருந்தனர்.
ஏ.சி.அப்போதுதான் அந்த நம்பூதிரியை ஊன்றிக் கவனித்தார். மலையாளப் படங்களில் வரும் மாந்திரீகன் போல் முன் மண்டையில் ஓரக் கொண்டை தொங்கிக் கொண்டிருந்தது.
பெரிய நெற்றியை சந்தனமும் குங்குமமும் சரி பாதியாய் பங்கிட்டிருக்க நீண்ட மூக்கின் நுனி ஒரு கத்தியின் கூர்மையை ஒத்திருந்தது. பார்வையில் ஒரு மிரட்டல் நிரந்தரமாய் ஒட்டியிருக்க மேல் சட்டையில்லாத உடம்பை ஒரு பட்டு அங்கவஸ்திரம் சுற்றி வளைத்திருந்தது.
ஏ.சி.தீனதயாளுவை அவர் கை கூப்பி வணங்க
பதிலுக்கு ஏ.சி.யும் வணங்கினார்.
சில நிமிட அமைதிக்குப் பின் நம்பூதிரியைப் பார்த்து சாம்பசிவம் சொன்னார் “சாமீ...நீங்க என் கிட்ட சொன்ன அந்த விஷயங்களை ஏ.சி.சார் கிட்டேயும் சொல்ல வேண்டும்!...”
முகத்தைச் சுளித்துக் கொண்டு அந்த நம்பூதிரி யோசிக்க
“எதுக்காக சொல்றேன்னா...?...இந்தப் பிரச்சினைல நிறைய கிரைம் இருக்கு!...அதையெல்லாம் காவல் துறையினரிடமிருந்து மறைக்கறதுல எனக்கு இஷ்டமில்லை!...எதுவாயிருந்தாலும் அவர்கள் முன்னிலையில் செய்யறதைத்தான் நான் விரும்பறேன்!...” சாம்பசிவம் தன்னிலை விளக்கம் தந்தார்.
“நீங்கள் சொல்வது சரியே!...ஆனால் பொதுவாகவே காவல்துறை அதிகாரிகள் இது போன்ற அமானுஷ்ய விஷயங்களை ஒன்று அலட்சியப்ப்படுத்துவார்கள்...அல்லது கேலி செய்வார்கள்...அதான் யோசிக்கிறேன்!” நம்பூதிரி தன் டி.டீ.எஸ்.குரலில் கணீரென்று சொல்ல
தொண்டையைக் கனைத்துக் கொண்ட ஏ.சி. “அய்யா...நானோ...எங்க டிப்பார்ட்மெண்டோ இதையெல்லாம் நம்புறதும்...நம்பாம இருக்கறதும் வேறு விஷயம்!...அதைப்பற்றி இப்போது விவாதிப்பதை விட நடந்த நிகழ்வுகளுக்கான காரணம் என்ன?...இனி இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?..அதைப் பற்றிப் பேசுவோம்...அதைப் பற்றி யோசிப்போம்!..ஏன்னா...ஏற்கனவே இங்க நாலஞ்சு உயிர்ப்பலி நடந்திட்டுது...அதனால இனி உயிர்ப்பலி நடக்கக் கூடாது..அதுக்காக செய்ய வேண்டியதை உடனே செய்யணும்” என்றார்.
“ஹா...ஹா...ஹா!” என வாய் விட்டுச் சிரித்த நம்பூதிரி
“காவல்துறை அதிகாரியே!...உங்களோட புத்திசாலித்தனமான பேச்சிற்கு என்னோட பாராட்டுக்கள்!...இனி என்னுடைய கணிப்புக்களையும்...சில யூகங்களையும் உங்கள் முன் வைக்கிறேன்!...மேற் கொண்டு செய்ய வேண்டியத்தியும் உரைக்கின்றேன்!...முடிவு உங்கள்