முடிவில்!” என்றார்.
தன் காலடியிலிருந்த பையை எடுத்த நம்பூதிரி அதிலிருந்த ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து அதை தன் வலது உள்ளங்கையில் வைத்துக் கொண்டு இறுகக் கண்களை மூடினார்.
பிறகு அதை தன் இரு புருவங்களுக்கும் மத்தியில் வைத்து முணுமுணுவென்று ஏதோ மந்திரங்களை ஓதினார்.
அடுத்த விநாடி....யாரும் எதிர்பார்த்திராத தருணத்தில் அதை ஓங்கிச் சுவற்றின் மீது பந்தை எறிவது போல் எறிந்தார் நம்பூதிரி.
சாம்பசிவமும் ஏ.சி.யும் அந்த நம்பூதிரியை வினோதமாய்ப் பார்க்க
“அய்யா..போய் அந்த எலுமிச்சம் பழத்தை எடுத்துப் பாருங்கள்!” என்றார் நம்பூதிரி சாம்பசிவத்தைப் பார்த்து.
முகமெங்கும் குழப்ப ரேகைகள் தாறுமாறாய் ஓட எழுந்து சென்று கீழே கிடந்த அந்த எலுமிச்சம்பழத்தை குனிந்து எடுத்துப் பார்த்த சாம்பசிவம் மறுவிநாடியே “அய்யய்யோ...” என்று கூவியபடி அதைக் கீழே போட்டார்
“விருட்”டென எழுந்த ஏ.சி.வேக வேகமாய்ச் சென்று அந்த எலுமிச்சம்பழத்தை எடுத்துப் பார்த்து விட்டு புருவங்களை நெரித்தார்.
வீசிய வேகத்தில் சுவற்றில் பட்டுத் தெறித்த அந்த எலுமிச்சம்பழம் லேசாய் வெடித்திருக்க....அதனுள்ளிருந்து...
ரத்தம் வடிந்து கொண்டிருந்தது.
தொடரும்...
Next episode will be published on 4th May. This series is updated weekly on Tuesdays.