தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 02 - முகில் தினகரன்
திருமண நாள் நெருங்கிக் கொண்டிருந்தது.
அன்று காலை தனசேகரின் வீட்டிற்கு வந்திருந்த பிரஸ்காரன் பல்வேறு டிசைன்களில் அழைப்பிதழ் கொண்டு வந்திருந்தான்.
“டேய் சேகர்...நீயே நல்லதா ஒண்ணை தேர்ந்தெடுத்து அச்சுக்குக் குடுத்துடு....அப்புறம் பத்திரிக்கை சரியில்லை...பாயாசம் சரியில்லை”ன்னு புலம்பாதே” என்று அவன் தாய் சொல்ல,
“சரிம்மா...” என்றவன் அந்த பிரஸ்காரன் பக்கம் திரும்பி, “அண்ணே...ஒரு பத்து நிமிஷம் வெய்ட் பண்ணுங்க இப்ப வந்திடறேன்” என்று சொல்லி விட்டு, அவசரமாய் வெளியேறி பைக்கை ஸ்டார்ட் செய்து பறந்தான்.
“என்னாச்சு இவனுக்கு?...ஏன் திடீர்னு கிளம்பிப் போயிட்டான்?” குழப்பத்துடன் உள் அறைக்குள் சென்றாள.
பத்து நிமிடங்களுக்குப் பிறகு, முரளியுடன் உள்ளே வந்த தனசேகர், “நான் இந்த நாலு டிசைன்களை செலக்ட் பண்ணி வெச்சிருக்கேன்!...இதுல ஒண்ணை நீ செலக்ட் பண்ணிக் குடு” என்று அந்த நாற்காலி மீதிருந்த நான்கு அழைப்பிதழ்களையும் எடுத்து முரளி கையில் கொடுத்தான்.
முகம் கோணினாள் தாய்.
அருவருப்பாய் நோக்கினான் பிரஸ்காரன்.
அந்த இரு முகங்களின் இங்கிதத்தைப் புரிந்து கொண்ட முரளி, “டேய்...உன்னோட கல்யாண இன்விடேஷனை நீ செலக்ட் பண்ணுவியா?...அதை விட்டுட்டு...என்னைப் போய்...” தயங்கினான்.
“டேய்..டேய்..ரொம்ப பிகு பண்ணாதே...செலக்ட் பண்ணிக் குடு”ன்னா குடு...அவ்வளவுதான்!...உன்னை விடப் பிரமாதமா யாரால் செலக்ட் பண்ண முடியும்?” செல்லமாய் மிரட்டினான் தனசேகர்.
நண்பன் காட்டிய அன்பில் நெகிழ்ந்து போன முரளி, இருப்பதிலேயே சிறந்த ஒரு கார்டை செலக்ட் செய்து கொடுக்க,
“டேய் முரளி சொன்னா நம்ப மாட்டே...நானும் அதைத்தான் செல்கட் பண்ணி மனசுக்குள்ளார வெச்சிருந்தேன்!..கரெக்டா நீயும் அதையே செலக்ட் பண்ணிட்டே!...ஸோ...நம்ம ரெண்டு பேரும் ஒரே அலை வரிசையில்தான் ஓடிக் கொண்டிருக்கிறோம்!” என்றான் தனசேகர் சந்தோஷமாய்.
அந்த வாரம் முழுவதும், தனசேகரும், முரளியும் அழைப்பிதழ் வினியோகத்திற்காய் கிராமம் கிராமமாய் பைக்கில் அலைந்தனர்.
“டேய் முரளி..தெனமும் உன்னைய என் கூட இழுத்துக்கிட்டுப் போயிடறேனே உனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லைதானே?” அன்றைய தினம் அழைப்பிதழ் வினியோகத்திற்காக