தொடர்கதை - எம் மதமும் சம்மதம் – 09 - விஜேஜி
அஜய் காலேஜ் லைப்ரரியிலிருந்தான், அப்போது அவனருகில் வந்தமர்ந்தாள் ஸ்ம்ரிதி. "ஹாய்!" மென்மையான அந்த பெண்ணின் குரலில் அஜய் திரும்பிப் பார்த்தான். அவன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெண், மிக அழகாக இருந்தாள், வானத்திலிருந்து இறங்கி வந்த ஒரு தேவதையை போல அவ்வளவு அழகு. அவன் ஒரு நிமிடம் ஆடி போய்விட்டான்.
எப்போதும், தான் தன் வேலை என்றிருப்பவன் அஜய், அதனாலோ என்னவோ அவளே அவனிடம் வந்து பேசினாள்.
"ஹாய்!" என்று மறுமுறை, கூறினாள். அவன் அவளை திரும்பிப் பார்த்தவுடன், அவன் சிறிது நிலை தடுமாறினான், ஆனால் அதை காட்டிக் கொள்ளவில்லை.
அவனும் "ஹாய்!" என்று கூறினான்
பரஸ்பரம் இருவரும் தங்களை அறிமுகப் படுத்திக்க கொண்டனர்.
நானும் உங்க க்ளாஸ் தான்."
"ஓ! அப்படியா? நான் பார்த்ததேயில்லை!" என்றான்
"நீங்க யாரையாவது பார்த்தாதான தெரிவதற்கு , நீங்கதான் எப்பவும் புக்கிலேயே தலையை வச்சிருக்கீங்களே அப்புறம் எப்படியாம் தெரியும்?" என்று அவள் மென்மையான குரலில் அவன் காலை வாரினாள்.
அவனும் மென்மையாக சிரித்து, "நாம படிப்பது பல உயிர்களை காக்கும் தொழில் சம்மந்தப் பட்ட படிப்பு. இதற்கு நிறைய கவனம் தேவை. அதனால் எனக்கு கிடைக்கிற நேரமெல்லாம் புக்கிலேயே செலவழிப்பேன்."
"நீங்க சொல்றது சரிதான், ஆனா கூட படிக்கற மாணவர்கள் யார் யாரென்று தெரிந்துக் கொள்ளக் கூடாதா என்ன?"
அவன் சிரித்து விட்டு "நீ சொல்றதும் சரிதான், தெரிஞ்சுக்கக் கூடாதா என்ன? ஐ அம் அஜய்!" என்று தனக்கே உள்ள பாணியில் அவளிடம் அறிமுகப் படுத்தி கொண்டான்.
"அஜய், உங்க குரல் எனக்கு ஃபாமிலியாரா இருக்கு, உங்க ஃபேஸ் கூட ரொம்ப ஃபாமிலியாரா இருக்கு!" என்று யோசித்தாள்.
"ரொம்ப யோசிக்காத, யாராவது என்ன மாதிரியே இருந்திருப்பாங்க அதான் உனக்கு தோணியிருக்கு."
"இருக்கலாம்!" என்று அவர்கள் படிப்பை பத்தியும், புக்ஸை பற்றியும் பேசினார்கள் .. அவர்களுடைய நட்பு நாளுக்கு நாள் அதிகரித்தது. இருவரும் ஒன்றாகவே படித்தார்கள், அஜய் அவளுக்கு நிறைய படிப்பில் ஹெல்ப் செய்தான். நாளுக்கு நாள் அவன் புத்திசாலித்தனத்தை நினைத்து வியந்தாள் ஸ்ம்ரிதி.