தான் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்!
“pbs! எவ்வளவு நேரம் தான் அந்த பாப்பாவையே பார்ப்ப???”
“இவ்வளவு நேரம் பார்க்கலை மனோஜ். இப்போ தான் போட்டோ ஓபன் செய்தேன். பாப்பா யாரை மாதிரி இருக்கா? அம்மு மாதிரியா, சரா மாதிரியா??? கண்ணெல்லாம் அப்படியே ஆச்சு அசல் அம்மு போல தானே இருக்கு!”
“அட, அட! பிறந்து ஒரு நாள் கூட ஆகாத குழந்தைக் கிட்ட ஜாடை கண்டுப்பிடிச்ச ஒரே ஆள் நீ தான், போ...”
“போட்டோவைப் பாருங்க மனோஜ், அப்படி தானே இருக்கு???”
மனோஜ் பதில் சொல்லாமல் மஞ்சுவை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தான்!
“என்ன பார்வை எல்லாம் ஒரு மாதிரி இருக்கு???”
“என் pbsஅ பார்க்கும் போது என் பார்வை இப்படி தான் இருக்கும்...! உனக்கு குழந்தை இவ்வளவு பிடிக்கும்னு எனக்கு தெரியாம போயிடுச்சு pbs... சாரி டா... நாமளும் நமக்குன்னு குழந்தை பத்தி யோசிச்சா என்ன?”
மஞ்சு இப்படி ஒரு கேள்வியை மனோஜிடம் இருந்து எதிர்பார்த்திருக்கவில்லை. எனவே அமைதியாக இருந்தாள்...
“ஜோதிக்கு கல்யாணம் நடக்கனும்னு முதல்ல யோசிச்சோம்... இப்போ தான் அவ கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிடுச்சே? அம்மாவும் சென்னைல ஹாப்பியா இருக்காங்க. அண்ணா அவனே அம்மாவை கவனிச்சுக்குறேன்னு சொல்லிட்டான். அப்போ நமக்கு வேற பொறுப்பு எதுவும் இல்லையே?”
மனோஜின் பேச்சில் கலந்திருந்த உற்சாகமும், ஆர்வமும், மஞ்சுவிற்கு அவள் நினைத்ததை சொல்வதா, வேண்டாமா என்ற தயக்கத்தைக் கொடுத்தது...!
“என்ன pbs ஒன்னும் சொல்ல மாட்டேங்குற??? என்னடா அதிசயத்திலும் அதிசயமா இவனுக்கே இதெல்லாம் உரைச்சிருக்கேன்னு நினைக்குறீயா??? சாரிடா...”
“மனோஜ்... நீங்க சொன்னது எல்லாம் சரி, ஆனால் ஒரு விஷயம் மறந்துட்டீங்க.”
“எதை மறந்தேன்?”
“இன்னும் ஆறு மாசத்துல நான் வேலையில ஜாயின் செய்யனும் மனோஜ். இப்போ குழந்தைன்னு யோசிச்சா, நீங்க ஒரு இடத்துல, நான் ஒரு இடத்துல, அதெல்லாம் சரியா இருக்குமா???”
“நாம அதுக்கு வேற, வேற இடத்துல இருந்தா தானே??”
“அதெப்படி?? இப்போ இருக்க சிச்சுவேஷன்ல புது விசா எல்லாம் கஷ்டம்னு நீங்க தானே சொன்னீங்க?”