ஹாஸ்பிடலில் தனத்தை சேர்த்தார்கள். அவளுக்கு வலியும் அதிகமாகியது. டாக்டர் சும் நர்சும் கூடவே இருந்தார்கள். அப்துலும், அஜயும் அங்கேயே இருந்தார்கள்.
அப்துல் தனத்தின் அருகிலேயே இருந்தான். அவள் வலியில் துடிக்கும் போது, அப்துலின் கண்ணில் இருந்து கண்ணீர் தளும்பியது.
அஜய் டாக்டரிடம் பேசிக் கொண்டிருந்தான். அவளுடைய வலி குறைவதற்கு ஏதாவது பண்ண முடியுமா என்று கேட்டான். டாக்டரும் "வலி தெரியாமல் இருக்க ஒரு இன்ஜக்ஷன் போட முடியும் ஆனால் அதற்கு தனம் சம்மதிக்கவில்லை." என்று கூறினார்.
ஆங்கிலத்தில்" உனக்கு என்ன உறவு?” என்று கேட்டார் டாக்டர்.
"என்னுடைய அம்மா!" என்று அவன் கூறினான்.
டாக்டரும் ஆச்சரியத்தில் "உங்க அம்மா ரொம்ப சின்னவளாச்சே!" என்று கூறவும்.
" எங்க அம்மாவுக்கு பதினாறு வயதிலேயே நான் பிறந்துட்டேன்!" என்று கூறினான் அஜய்.
"அப்படியா ?நீ என்ன படிக்கிற? எங்க படிக்கிற?" கேட்டார், டாக்டர்.
" நான் இந்தியாவில் மெடிசின் படிக்கிறேன்!" என்று கூறினான், அஜய்.
டாக்டர் ஆச்சரியத்தில் "அப்படியா!" என்று கேட்டார். "இன்னும் கொஞ்ச நாளில் நீயும் ரெடி ஆயிடுவே எல்லா பேஷன்ட்ஸ்க்கும் ட்ரீட் பண்றதுக்கு!" என்று கூறினாள்.
சிரித்துக்கொண்டே "ஆமாம்!" என்று கூறினான் அஜய்யும்.
அவர்கள் பேசிக்கொண்டிருந்த நேரத்திலே தனம் அலறினாள். அப்துல் அந்த கத்தலில் பயந்துவிட்டான். அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டான், கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது. உடனே அஜய் அம்மாவிடம் சென்று அவள் கையை பற்றிக்கொண்டு, அம்மா என்னுடைய கையை நல்லா பிடிச்சுக்கோ, நல்லா மூச்சை இழுத்து விட்டு புஷ் பண்ணு!" என்று கூறக் கூற அவன் சொல்வதை கேட்டு அப்படியே செய்தாள், தனம்.
சிறிது நேரத்தில் குழந்தை வெளியே வந்தது, வீல் என்ற அந்தக் குரலைக் கேட்டவுடன் அப்துல் ஓடிவந்து அவளுடைய அருகில் நின்றான், அஜய் தன் அம்மாவின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு, அப்பாவின் கன்னத்தில் முத்தமிட்டு அங்கிருந்து அகன்றான்.
தன் பாட்டி நிக்கத்தை கூப்பிட்டு விஷயத்தை கூறினான், "பாட்டிம்மா, தங்கபாப்பா பொறந்திருக்கா உங்களுக்கு சந்தோஷமா?"
"எனக்கு ரொம்ப மகிழ்ச்சி அஜய், உனக்கு எப்படி இருக்கு ?உனக்கு தானே தங்கபாப்பா வேண்டும் என்று ஆசை?" என்று நிக்கத் கேட்டார்
"ஆமாம் பாட்டிமா ரொம்பவே சந்தோஷமா, இருக்கு."
"குழந்தையை பாத்தியா அஜய், எப்படி இருக்கா? தனம் எப்படி இருக்கா?"