சேர்ந்தவத்தானே ? எந்த மதமா இருந்தா என்ன? எம் மதமும் சம்மதம்! தனம்மா. நாங்க என்னிக்கும் நீ வேற, நாங்க வேறன்னு பார்க்கல, நம்ம அஜய், பாரதியும் வேற , நம்ம இம்ரானும், சாயிரா வேறன்னு பார்க்கல, எல்லா
குழந்தைகளும் எங்க இரத்தம். அஜயும், பாரதியும், உன் வயிற்றிலே பிறந்தாலும், எங்க இரத்தமும் தாண்டா? இதுல, மதம் எங்க வந்தது?"
"சாரி அங்கிள், நான் அதுக்காக சொல்லல, உங்களை பற்றி எனக்கு தெரியாதா என்ன? ஆனால், நாம ஏற்கனவே நிறைய பிராபளத்த பார்த்திருக்கோம், அதனால நாடு விட்டு நாடு போயிருக்கோம். அதனால தான் கேட்டேன்."
"எனக்கு புரியறது தனம்மா, அதெல்லாம் அப்படித்தான் இருக்கும். நாலு பேர், நாலு விதமா பேசத்தான் பேசுவாங்க, நல்லதை எடுத்துக்கணும், வேண்டாததை விட்டு விடணும். நீ எதை பற்றியும் கவலைப் படாதேம்மா."
எல்லோரும் சந்தோஷத்தோடு அஜயின் முகத்தை பார்த்தார்கள். அவனும் வெட்கத்தோடு சிரித்தான்.
இந்த மனம் ஒவ்வொருவருக்கும் இருந்தால், இருந்தால் எல்லா காதல் மனங்களும் சந்தோஷத்தோடு வாழ்வார்கள்.
இவர்கள் இதே சந்தோஷத்தோடும், குதூகலத்துடனும் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்.
முற்றும்