தனம், புன்னகைத்துக் கொண்டே எழுந்து உட்கார முயற்சி செய்தாள். ஆனால் ,அவளுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. அஜய் மறுபுறம் சென்று அவளுக்கு பின்பக்கம் கை கொடுத்து எழுந்து உட்கார உதவி செய்தான்.
அப்போது, டாக்டரும், நர்சும் உள்ளே வந்தார்கள்.
"ஹௌ ஆர் யூ டனம்?"
" ஐ ஆம் ஃபைன் டாக்டர்!"
" ஹாவ் யூ செலக்டட் தி நேம்?"
" இன்னும் இல்லை, இதோ, என் மகன் அஜய்தான் செலக்ட் பண்ணனும்."
" அஜய், கமான், செலக்ட் தி நேம். ஹாஸ்பிடலுக்கு கொடுக்க வேண்டும்."
" அம்மா, நீதான், பாப்பாக்கு பேர் வைககனும்மா!"
" அஜய், நீதான் உன் தங்கைக்கு பேர் செலக்ட் பண்ணனும்." என்று தனம் கூறினாள்
அஜய் குழந்தையை தன் கையில் தூக்கி வைத்து கொண்டான்.' பாரதி' அம்மா, பாரதின்ற பேர் எப்படி இருக்கும்மா?"
" சூப்பர் செல்லம், உன் தங்கைக்கு பாரதின்ற பேர் ரொம்ப பொருத்தமா இருக்கும், அஜய். "
அவள் முகத்தில் சந்தோஷம் பிரதிபலித்தது.
" பாரதி, என் செல்ல, பாரதி" என்று கூப்பிட்டான், அஜய்
அப்போது, அவனுடைய ஃபோன் மணி அடித்தது.
"ஹாய் ஸ்மிருதி! எப்படி இருக்க?" அவன் முகத்தில் தனி ஒரு பொலிவை கண்டாள் தனம்.
" என்னை மறந்துட்டியா? அஜய்?"
" கெஸ் வாட்? நான் இப்ப ஹாஸ்பிடல்ல இருக்கேன்."
" ஓ! டெலிவரி ஆயிடுத்தா?"
" எஸ்! எதிர்பார்த்த மாதிரி, இட்ஸ் எ கர்ல்!"
" கங்ராட்ஸ் அஜய்!"
" தாங்ஸ் ஸ்மிருதி!"
" நான், உங்க அம்மாகிட்ட விஷ் பண்ணலாமா?"
"ம்ம்….ஷ்யூர்!" என்று திரும்பும் போது, அங்கே நிக்கத், அப்துல், சாய்ரா, இம்ரான் நால்வரும் வருவதை பார்த்தான்.
"பாட்டிம்மா "என்று நிக்கத்தின்அருகில் சென்று அவரை அணைத்துக் கொண்டு "இந்த குட்டி பாப்பாவை பாருங்க!" என்று சந்தோஷத்துடன் , குழந்தையை காண்பித்தான், அப்படியே ஃபோனை தன் அம்மாவின் கையில் தினித்தான். தனத்திற்கு இது ஏதோ தன் மகனுக்கு