முக்கிய மான ஃபோன் எனறு புரிந்தது.
"ஹலோ" என்றாள் தனம்
மறுபுறத்தில் இருந்து "ஹலோ ஆன்ட்டி என் பெயர் ஸ்மிருதி, நான் அஜயின் ஃபிரண்ட்" என்று கூறினாள், அந்தப் பெண்.
ஹலோ சிதஸ்மிரிதி நான் அஜயின் அம்மா, செல்லுமா?"
"கங்கிராஜுலேசன்ஸ் ஆண்டி! " என்று ,அந்தப் பெண் கூறவும் அவளுக்கு வெட்கமாக இருந்தது.
"தேங்க்யூ ஸ்மிருதி "என்று தனம் கூறினாள்.
"நீ அவனோட படிக்கிறியா?"
"ஆமாம் ஆண்ட்டி நானும் அஜய்யோட மெடிசின் தான் பண்றேன்!"
" ஓ குட்! "
" உன்னோட பேசினது ரொம்ப சந்தோஷமா இருக்கு ஸ்மிருதி!"
" ஸேம் இயர் ஆண்டி!"
" ஓகே, ஸ்மிருதி, அப்புறம் பேசலாம்!"
" சரி ஆண்டி, பை!"
அது வரை, ஒரு கண்ணால் அம்மாவை பார்த்துக் கொண்டே, தன் தங்கை, தப்பியோடும் விளையாட்டிக் கொண்டிருந்தான், அஜய்.
தனத்திடமிருந்து, ஃபோனை வாங்கிக் கொண்டான். ஒரு நமுட்டு சிரிப்போடு. அதைப் பார்த்த தனம்,புரிந்துக்கொண்டாள்.
அவள், மற்றவர்களை பார்த்தாள், எல்லோரும் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருந்தார்கள்.
நிக்கத், தனத்திடம் வந்தார், "எப்படிம்மா இருக்க தனம்?" என்று அவளை விசாரித்தார்.
"நான் நல்லா இருக்கேன் ஆண்டி, "
"என்ன சொல்றா உன் மகள்?"
"நீங்க தான் சொல்லனும் உங்க பேத்தி என்ன சொல்றான்னு, கேட்டு சொல்லுங்க ஆண்டி ?" என்று சிரித்துக் கொண்டே பதில் கூறினாள்.
"அடடே அம்மா கேட்டு சொல்ல சொல்றாங்க, நீங்க என்ன சொல்றீங்க, புது பாப்பா?" என்று குழந்தையுடன் கொஞ்சிக் கொண்டே கேட்டார் நிக்கத் .
"ங்க ங்க "என்று குழந்தை ஒலி எழுப்பி, பிறகு அழ ஆரம்பித்தது.
"என்னத்துக்கு அழறீங்க, பசிக்குதா? இங்க பாருங்க சின்ன அண்ணனும் அக்காவும் வந்திருக்காங்க, நம்ம சாயிரா அக்காவை பாருங்க!" என்று குழந்தையை, இம்ரானுக்கும், சாயிராவிற்கும் காண்பித்தாள்.
இருவரும்,குழந்தையின் கையையும் காலையும் தடவிக் கொடுத்து ஆர்வமாக குழந்தையைப்