பார்த்தார்கள்.
"மாம்மி, பேபி இஸ் வெரி பியூட்டிபுல்! "
"படி பையா, பேர் செலெக்ட் பண்ணியாச்சான்னு கேளுங்க?" என்றார்,நிக்கத் .
"செலெக்ட் பண்ணியாச்சு பாட்டிம்மா, டாடி வந்து ஓகே பண்ணனும். "
"என் அஜய் சொன்னா, டாடி வேணாம்னா சொல்லப் போறேன்? வாட்ஸ் தி மேட்டர் மை சன்? "
"ஹாய் டாடி, குழந்தையோட பேர் டாடி!"
"ஓ செலெக்ட் பண்ணிட்டியா?"
"எஸ் டாட்!"
"வாட் இஸ் இட் ? என்று கண்ணை விரித்துக் கேட்டான்.
"எல்லாருக்கும் தெரியனுமா?" என்று எல்லாரையும் ஒரு முறை சுற்றி பார்த்தான். அப்போது யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டது , எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள், அங்கே...
"ஹாய் வாப்பா, வாங்க, இது என்ன சர்ப்ரைஸ், இப்பத்தான் கொஞ்சம் முன்னாடி பேசினீங்க, சொல்லவே இல்லை, நீங்க இங்க வர்திருக்கீங்கன்னு?" என்று கேட்டான் ,அப்துல் .
"நான் சொல்லிட்டா, சர்ப்ரைஸ் இல்லையே, அதான் சொல்லல. " என்றார் சிரித்து கொண்டே. இருவரும்
அணைத்து இரு .தோள்களோடும் இஸ்லாமிய முறைப் படி ஆலிங்கனம் செய்துக் கொண்டனர். பிறகு இம்ரானோடும், அதே மாதிரி செய்தார். பிறகு சாயிராவையும் அணைத்துக் கொண்டார். அஜயையும் அனைத்துக் கொண்டு, அவன் கன்னத்தில் முத்தம் வைத்து விட்டு, தனத்தின் அருகே சென்று அவளுக்கு ஆசி செய்வது போல் அவள் தலையில் கை வைத்து, "நல்லா இருக்கணும், தங்கம்! ". என்று ஆசி செய்தார்.
பிறகு அங்கிருந்த கை சுத்தம் செய்யும் சுத்தீகரத் திரவம் எடுத்து கை சுத்தம் செய்து கொண்டார்.பிறகு, குழந்தைக்கு அருகில் சென்று பார்த்தார். தனம் கையில் எடுத்துக் கொள்ளச் சொல்ல, "வேண்டாம், இப்பத்தான் பிளேன்ல வந்தேன், நாளைக்கு சுத்தமா வந்து தூக்கிக்கறேன்! " என்று கூறி, "என்ன பேரும்மா வைக்கப் போறீங்க ?" என்று தனத்தைப் பார்த்து கேட்க, அவர்கள் எல்லோரும், இப்போது அஜய்யை பார்த்தார்கள்.
அவன் தன் அம்மாவை ஒரு முறை பார்த்து விட்டு, "பாரதி" என்று கூறி, எல்லோரையும் பார்த்தான், அஜய் .
"வாவ் , நைஸ் நேம், ரொம்ப நல்ல பேர்! " என்றான் அப்துல்..
"ஆமாம் அஜய், பேர் ரொம்ப நல்லாயிருக்கு" என்றார்கள் , நிக்கத்தும், ஜாஃபரும்.
இம்ரானும், சாய்ராவும் பேரை சொல்லிப் பார்த்துக் கொண்டார்கள்.