அப்போது, டாக்டர் .உள்ளே வந்தார்,"ஹலோ , லவ் பர்ட்ஸ், ஹவ் ஆர் யு?" என்று கேட்டுக் கொண்டே.
"யுவர் சன் இஸ் வெரி ஹாண்ட்ஸம், ஜஸ்ட் லைக் யு"! என்று அப்துல்லை பார்த்து கண்ணடித்துக் கொண்டே கூறவும், அவனும் சந்தோஷத்தோடு "தாங்க் யு !" என்று வாயெல்லாம் பல்லாக கூறினான் அப்துல் .
"அவள் கண்ணடித்தவுடன் எல்லா பல்லையும் நல்லா காட்டு, "என்று மெதுவாக நொடித்துக் கொண்டு, தனம். கோபமாக முகத்தை வைத்துக் கொண்டாள்.
"ஹேய் .. என் பெண்டாட்டிக்கு .கோபத்தைப் பாருடா. இதுவும் அழகாத்தான் இருக்கு. என் தங்கத்துக்கு என்ன பொறாமையா, இது என் டார்லிங்கு சூட் ஆகலையே?"
அப்போது எல்லோரும் சாப்பிட்டு விட்டு வந்துவிட்டனர்.
உள்ளே வந்த அஜய், அப்பாவிடம் சென்று அனைத்துக் கொண்டு, "ஹவ் ஆர் யு டாட் ?"
"ஐ அம் சோ ஹாப்பி, என்னோட ஃபேமிலி பூரா இங்க இருக்கு, ரொம்ப நாளைக்கு பிறகு வாப்பா, அம்மி, உங்களை எல்லாம் பார்க்கறேன். வாப்பா, அம்மி உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன், அஜய் நீ இங்க இருக்கடா "என்று தன் இதயத்தை தொட்டுக் காண்பித்தான்.
"டாட் " என்று கூறி அவனை அணைத்து, " என்ன டாடி ரொம்ப எமோஷனாகறீங்க, ப்ளீஸ் டாடி!" என்றான் அஜய். அவன் அப்பாவின் தோளில் தட்டிக் கொடுத்து.
பிறகு குழந்தையை கொஞ்சுவதும், பேசி சிரிப்பதும் என்று பொழுது ஓடியது. எல்லோரும் கிளம்பலாம் என்று இருந்த போது , அப்துல் எல்லோரையும் கொண்டு விட்டு வருவதாகவும். அஜயை, தனத்தோடு இருக்கும்படி கூறினான் அப்துல்.
"சரி டாட்! " என்று கூறினான் அஜய்.
தனமும் அஜயும் பார்த்துக் கொள்வதிலிருந்து, தனத்திற்கு ஏதோ அவனிடம் கேட்க வேண்டும் போல் இருந்தது, அது என்ன என்று தெரிந்துக் கொள்ள அவனுக்கும் ஆசைதான், அவள் எல்லோர் எதிரிலும் கேட்காமல் இருந்ததால் ஏதோ ஒரு முக்கியமான விஷயம், அது என்னவென்று தெரிந்த பின்னால் அவளே தன்னிடம் கூறுவாள், ' என்றுதான் அவனை அங்கு விட்டு விட்டு வந்தான், அப்துல் .
"வா அஜய், இங்க வந்து அம்மா பக்கத்தில் உட்கார்."
"அம்மா, ஐ நோ வாட் யு ஆர் அப் டு ?"
"ஹ்ம், குட், அப்போ சரி, நேரே விஷயத்துக்கு வரலாம், சொல்லு? "
"எண்ணத்தை சொல்றது அம்மா?"
"என்ன இருக்கோ சொல்லு?"