அவன் வெட்கப் பட்டான். அவன் முகம் சிவந்தது, சிரித்துக் கொண்டே இருந்தான்.
"ஐயோ, என் குழந்தை வெட்கப் படறான் பார். என் செல்லம், நீ இவ்வளவு பெரிய பையனா வளர்ந்துட்ட?" என்றாள் சந்தோஷத்தோடு .
"ஐ லைக் ஸ்ம்ரிதி, ஷி இஸ் ஜஸ்ட் எ பிரென்ட் சோ பார் ,மாம். பட் , இன்னும் எதுவும் டிசைட் பண்ணல, அவள் தான் கொஞ்சம் புஷ் பண்றா, அவ எனக்கு ஸ்பெஷல் தான் மா, தட்ஸ் இட்! ."
"சோ??"
"சோ வாட்?"
"நீ அவளை லவ் பண்ணுறியா, இல்லையா ?"
"இது லவ்தானான்னு, எனக்குத் தெரியலை அம்மா." என்றான், தீவிரமான முக பாவத்துடன்.
"வெல், அது வரையில் அவளை நல்ல புரிந்துக் கொள்ள ட்ரை பண்ணு! ."
"எப்படி இருந்தாலும், ரெண்டு பேருமே எங்களோட படிப்பு முடிக்கனும். என்னோட இந்த ஷூட்ஸ் முடிச்சு கொடுக்கணும், ஹாஸ்பிடல் கட்டணும், நிறைய வேலை இருக்கும்மா, இப்போதைக்கு, காதல் கல்யாணம்லாம் என்னோட மைண்ட்ல இல்லை.”
“அதெல்லாம் முக்கியம்தான் கண்ணா, அதுக்காக அந்தந்த வயசில் வரும் காதல் அதை அனுபவிக்கனும். நீ ரொம்ப பொறுப்பானவன், நீ எந்த பெண்ணையும் ஏமாற்ற மாட்டேன்னு எனக்குத் தெரியும். ஏனென்றால் உன் அம்மா ஏமாந்தது உனக்குத் தெரியும் இல்லையா?"என்று அவள் கூறும் போதே அவள் கண்கள் கலங்கியது. அவன் உடம்பு விறைத்தது.
"அம்மா, இந்த நேரத்தில் நீ கலங்கக் கூடாது, காம் டவுன். போதும், இப்போ நீ ஹாப்பியா தானே இருக்க, பர்கெட் தி பாஸ்ட்." என்று அம்மாவை அணைத்து சமாதனப் படுத்தினான்.
"ஐ அம் சாரி அஜய். நல்ல காலம் நீ கிடைத்து விட்டாய், அதுவும் நீ உன் அப்பாவை போலவே இருந்ததால், " என்று உடைந்தாள். "என்ன அம்மா இது? சொன்னா கேள், இப்ப நீ அழுதால் வேற ஏதாவது காம்ப்ளிகேஷன்ஸ் வரும். ப்ளீஸ் காம் டவுன் ." என்று அவளை சமாதனப் படுத்தினான் .
ஒரு வாறு அவர்கள் சமாளித்தபோது, அப்துல் வந்தான். "வாட்'ஸ் ஹாபெனிங், ஏன் தனம் அழுதுண்டிருக்க? "என்று விறைப்பாக கேட்டான், இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே .
"நத்திங் டாட்!" என்றான் அஜய்.
"நத்திங்? தென் ஒய் இஸ் ஷி அப்செட்?" என்று கேட்டான் அப்துல்.
"ஒன்னும் இல்லை, ஆது. நம்ம அஜய்க்கு கல்யாண வயசு வந்து விட்டது, அதைப்பற்றி தான்