“அது சரி இருக்கட்டும்! ஆனால், நீ எதுக்கு என் மேல கோபமா இருந்த??”
“நான் கோபமா இருந்தது எப்படி உங்களுக்கு தெரியும்?”
“ஸ்டெப்பனி சொன்னாங்க. ஒய்ஃப் கிட்ட பேச சொன்னாங்கன்னு சொன்னேன்லயா, அப்போ கூடவே உன் ஒய்ஃப் கிட்ட சண்டைப் போட்டுட்டு வந்துட்டீயான்னு வேற கேட்டாங்க. ஒரு செகன்ட் லேட் ஆனாக் கூட கோபப் பட்டு திட்டுவாங்க, அவங்களே உன் ஒய்ஃபை முதல்ல சமாதானப் படுத்துன்னு ஃபீல் செய்து சொல்ல வச்சுட்டீயே pbs!! உன் அருமையோ அருமை!”
மனோஜ் சிரித்துக் கொண்டே கிண்டலும் கேலியுமாக சொல்ல, மஞ்சுவின் மனநிலையும் மாறிப் போனது!
“அருமையா இருந்து என்ன யூஸ்? நீங்க லேட்டா போறதை வச்சு சூப்பர் ஹீரோவா மாறி உலகத்தை காப்பாத்த போனேன்னு கேட்க இன்ட்ரஸ்டிங்கா ஏதாவது ஜூஸி கதை சொல்வீங்கன்னு பார்த்தா, நீங்க கூட்ஸ் ட்ரெயின் போச்சுன்னு அறுவையா சொல்றீங்க!!! என்ன செய்றது???”
“ஹ்ம்ம்... உனக்கு பிடிச்ச மாதிரி ஜூஸி ஸ்டோரீஸ் ஈவ்னிங் வந்து சொல்றேன்... இப்போ டைம் ஆச்சு, எதுக்கு கோபம்னு சொல்லு... நான் கிளம்பும் போது நல்லா தானே இருந்த???”
“அது முக்கியமா ஒன்னுமில்லைங்க. நீங்க வேலையை பாருங்க, அப்புறமா பேசுவோம்...”
மனோஜிடம் பேசி முடித்து அழைப்பை துண்டித்தப் பிறகு கடைசியாக அவள் சொன்ன ‘ஒன்னுமில்லைங்க’ பற்றி யோசித்தாள் மஞ்சு!
சில நிமிடங்களுக்கு முன் கோபம் கொப்பளித்தது என்ன, ஆனால் இப்போது அது ‘ஒன்றுமில்லை’ என தலைக் கீழாக மாறிப் போனது என்ன!!!??
மனோஜ் எங்கே என்று தெரியாது திகைத்த சில நிமிடங்களில், நிர்மல் விஷயம் அவளுக்கு அவசியம் இல்லாமல் போய் விட்டது!
எதற்கு தான் தேவையே இல்லாத விஷயங்களை நினைத்து மனதை குழப்பி கொள்கிறோமோ???!!!
தனக்கு மன முதிர்ச்சி வருவதாக மஞ்சுவிற்கே தோன்றியது!!!!!!
அதைப் பற்றி நினைத்து சிரித்துக் கொண்டே அன்றைய வேலைகளை தொடர்ந்தாள்.
மாலையில் மனோஜ் திரும்பியப் பிறகு, அவன் ஓய்வாக இருக்கும் போது துர்காவிடம் பேசியது, அமுதாவிடம் பேசியது அனைத்தையும் ஒப்பித்தாள். கூடவே கொசுறாக எதனால் கோபமாக ‘ஹலோ’ சொன்னாள் என்பதையும் பகிர்ந்தாள்.
மனோஜுக்கு சிரிப்பு தான் வந்தது!
“உன்னை நான் சூப்பர் டூப்பர் புத்திசாலின்னு நினைச்சு வச்சிருக்கேன்... நீ பேபியா இருக்கீயே