மெயின் கேட்டிற்குள் நுழைய நுழையவே அங்கிருந்த செக்யூரிட்டி கேட்டார். “என்ன தம்பி...ரொம்ப நாளா அம்மாவைப் பார்க்க வரவேயில்லை?”
“அதையேன் கேட்கறீங்க...திடீர்னு என்னைய கோயமுத்தூரிலிருந்து பொள்ளாச்சிக்கு டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்க...அங்க போய் ஒன்றரை வருஷம்தான் ஆச்சு...இப்ப மறுபடியும் சென்னைக்கு மாத்திட்டாங்க!...நாடோடிப் பொழப்பா இருக்கு...என் பொழப்பு” என்றான் ரவீந்தர்.
“சரி...சரி...போய் அம்மாவைப் பாருங்க!...அவங்கதான் உங்களைப் பார்க்கலையே!ன்னு ரொம்ப கவலைப் பட்டுக்கிட்டு இருந்தாங்க!”
வேக வேகமாய் உள்ளே சென்றவன், இல்லத்தின் அலுவலகத்திற்குச் சென்று முறையான அனுமதியைப் பெற்றுக் கொண்டு தன் தாயைச் சென்று சந்தித்தான்.
“என்னம்மா...இப்படி இளைச்சுப் போயிட்டே?” அங்கலாய்த்தான் மகன்.
“அடப் போடா...நான் நல்லாத்தான் இருக்கேன்...நீதான் இளைச்சுத் துரும்பாய்ப் போயிட்டே” என்றாள் அவன் தாய்.
இருவரும் சிறிது நேரம் பரஸ்பரம் நலம் விசாரித்து முடித்த பின், “டேய்...ரவி...எப்படா எனக்கு ஒரு மருமகளைக் கொண்டு வரப் போறே?” தாய் கேட்க,
“அநேகமா என்னை சென்னையிலேயே நிரந்தரமா போட்டுடுவாங்க!ன்னு நெனைக்கறேன்!...அது உறுதியானதும்...உன் ஆசை போல் ஒரு மருமகளைக் கொண்டு வந்திடலாம்!” என்றான்.
அப்போது அந்த வழியே கடந்து சென்ற ஒரு இல்ல சிப்பந்தியை அழைத்தாள் அவள், “என்னங்க ஜோதியம்மா?... “மகன் வரலை...மகன் வரலை”ன்னு புலம்பிட்டே இருந்தீங்களே?....மகன் வந்திட்டாரு....போதுமா?”என்றான் அவன் வரும் போதே,
“டேய்...முருகா....நம்ம நிர்மலாவை நான் கூப்பிட்டேன்!னு சொல்லி இங்க வரச் சொல்லு” என்றாள் ரவீந்தரின் தாய் ஜோதியம்மா.
“அவங்க...இந்த நேரத்துல சமையல் ஆபிஸ் ரூம்லதான் இருப்பங்க...இதோ உடனே வரச் சொல்லுறேன்” சொல்லியபடியே ஓடினான் அந்த முருகன்.
ஐந்தே நிமிட்த்தில் வந்த அந்தப் பெண்ணிற்கு கிட்ட்த்தட்ட முப்பத்தியேழு...முப்பத்தியெட்டு வயதிருக்கும்...களையான முகம்...கனிவான பார்வை.
“நிர்மலா...இவன்தான் என் மகன் ரவீந்தர்!...நீ பார்த்ததேயில்லை!ன்னு அதான் உனக்கு இவனைக் காட்டணும்னு உன்னை வரச் சொன்னேன்!...”
ரவீந்தரைப் பார்த்துப் புன்னகைத்தவள், “அம்மாவுக்கு எப்பவும்...உங்க ஞாபகம்தான்!.. “என் மகன் சாப்பிட்டிருப்பானா?..என் மகன் தூங்கியிருப்பானா?”ன்னு...ஒவ்வொரு நிமிஷமும் கவலைப்பட்டுக்கிட்டே இருப்பாங்க!...” என்றாள் அந்த நிர்மலா.
“ஓ...”என்றவாறே தாயின் தலையை ரவீந்தர் தடவி விட,