“ஜோதியம்மா...நீங்க உங்க மகனோட பேசிட்டிருங்க...எனக்கு கொஞ்சம் ஆபீஸ் ரூம்ல வேலையிருக்கு...அதை முடிச்சிட்டு அப்புறமா வர்றேன்” சொல்லி விட்டு அப்பெண் நகர்ந்ததும்,
“டேய்...ரவி!...இந்தப் பொண்ணு அன்னை தெரஸா மாதிரி...கல்யாணமே பண்ணிக்காம தன்னோட வாழ்க்கையை ஏழைகளுக்கு உதவி செய்வதற்கும்...முதியோர்களுக்கு பணி விடை செய்வதற்கும்...அர்ப்பணிச்சிட்டு வாழ்ந்திட்டிருக்காங்க” என்றாள் ஜோதியம்மா.
“வாவ்...கிரேட்”என்றான் ரவீந்தர்.
“இவங்களுக்கு ஒரு தங்கச்சி...அது கோயமுத்தூர்ல ஏதொவொரு ஆபீஸ்ல வேலை பார்த்திட்டிருக்கு...அதுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்!னு இந்தப் பொண்ணு படாதபாடு படுது!...ப்ச்...ஆண்டவன் இன்னும் கருணை காட்டலை!”
“ம்மா..நல்லவங்களை ஆண்டவன் சோதிக்கறது எதுக்கு தெரியுமா?...அவங்களுக்கு மன வலிமையைக் கொடுப்பதற்கு...ஸோ...இந்தப் பெண்ணோட நல்ல மனசுக்கு....கூடிய சீக்கிரமே அவங்க தங்கச்சிக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை அமையும்...”என்றான் ரவீந்தர்.
“இல்லைடா....நான் என் மனசுல ஒண்ணு நெனைச்சிருக்கேன்....அதாவது எனக்கு இந்தப் பொண்ணு செஞ்சிட்டிருக்கற பணிவிடைகளுக்கும்....உதவிகளுக்கும் பிராயச்சித்தமா...இவங்களோட தங்கச்சிக்கு நாமே வாழ்வு குடுத்தா?...என்ன?...ன்னு தோணுது” சொல்லி விட்டு மகனின் முகத்தைக் கூர்ந்து பார்த்தாள் ஜோதியம்மா.
“ம்ம்ம்..புரியலை!....நீ என்ன சொல்ல வர்றே?...தெளிவாய்ச் சொல்லு”
“அங்கேயும் இங்கேயும் பொண்ணு தேடறதுக்கு பதிலா நீ ஏன் இந்தப் பொண்ணோட தங்கச்சியைக் கட்டிக்கக் கூடாது?” ஜோதியம்மா தன் எண்ணத்தைப் “பளிச்” சென்று சொன்னாள்.
அரண்டு போனான் ரவீந்தர். “அய்யோ..அம்மா...நீ பாட்டுக்கு வாக்கு குடுத்து வெச்சிடாதே...” அவசரமாய்ச் சொன்னான்.
“ஏண்டா?”
“பின்னே?...அந்தப் பொண்ணு கருப்பா...செவப்பா?....நெட்டையா...குட்டையா?..எதுவுமே தெரியாம...எப்படிம்மா நான் ஓ.கே.சொல்லுவேன்?” பதறினான்.
“ம்ம்ம்...நீ சொல்றதும் சரிதான்” என்றபடி யோசித்த ஜோதியம்மா, “அந்த நிர்மலா...தன்னோட தங்கச்சி போட்டோவை செல்போனில் வெச்சிருக்கா!...எனக்குக் கூட ஒருநாள் காட்டினா...பொண்ணு அம்சமாய்த்தான் இருந்தாள்!...அந்த நிர்மலாவை மறுபடியும் வரச் சொல்லி உனக்கும் காட்டச் சொல்லவா?” கேட்டாள்.
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்..என்னோட மொபைல் நெம்பர் உன் கிட்ட