தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 37 - பிந்து வினோத்
அகிலா அறிவுக்கரசியின் அறைக்கு வந்து சேர்ந்தப் போது அறிவுக்கரசி தலைப் பின்னிக் கொண்டிருந்தாள். அகிலா அந்த நேரத்தில் தன் அறைக்கு வந்திருப்பதால் ஆச்சர்யம் அடைந்தவளாய்,
“அகிலா???” என்று தொடங்கியவள்,
“ஓ... ட்ராவல் பத்தி கேட்க வந்தியா??? ஒரு மணி நேரத்துல எல்லா விபரமும் சொல்றேன் அகிலா... சாரி, நிறைய வேலை அதான் உடனே சொல்ல முடியலை...” என்று அகிலாவின் வருகைக்கான காரணத்தை ஊகித்து பேசினாள்.
“அதை மெதுவா சொல்லுங்க, எனக்கு அவசரம் இல்லை. நான் வந்தது வேற ஒரு விஷயத்துக்காக... நான் இப்போ உடனே ஆர்ட் ரூம் போகனும் அறிவுக்கரசி... ப்ளீஸ் ஹெ ... உனக்கு அனுமதி வாங்கிட்டு போறதுக்கு நேரம் இருக்காது... அதனால...”
“இனிமேல் எதுக்கு அனுமதி வாங்கனும்??? அதான் உங்க இளவரசர் உங்க கிட்ட நேத்தே அவராகவே அனுமதி கொடுத்திட்டாரே...”
This story is now available on Chillzee KiMo.
...