“நான் இன்னைக்கு வீட்டுல தானே இருக்கேன்... வேதாந்த் என் கூட இருக்கட்டும்... நான் பார்த்துக்குறேன்...”
“வேண்டாம்...” ஒரு சின்ன வினாடி கூட எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக சொன்னாள் வினோதினி...
மஞ்சுவே கொஞ்சம் திகைத்துப் போனாள்...
“சாரி மஞ்சு... அப்படி ரூடா சொல்லனும்னு நினைக்கலை...”
“என்ன ஆச்சு வினோ??? ஏன் ஒரு வருஷத்துல எல்லாம் இப்படி மாறிப் போய் இருக்கு???”
சின்ன தயக்கத்திற்குப் பின்,
“நாம ஈவ்னிங் பேசலாம் மஞ்சு...” என்றாள் வினோதினி.
“ஹுஹும்... சான்ஸே இல்லை... எனக்கு தெரிஞ்சே ஆகனும்... நீங்க எப்படி உங்க அம்மா வீட்டுக்கு போவீங்க???”
“ஒரு ஆட்டோ அரேன்ஜ் செய்திருக்கேன்... டெய்லி காலையிலேயும் ஈவ்னிங்கும் அதே ஆட்டோ தான்...”
“அப்போ, இன்னைக்கு நானும் உங்க கூட வரேன்... போற வழில பேசலாம்... திரும்பி வீட்டுக்கு வரது நானே மேனேஜ் செய்துப்பேன்...”
“அதே ஆட்டோல கூட நீ திரும்பி வரலாம்...”
“அஞ்சு நிமிஷம் இருங்க... நான் உடனே கிளம்பி வரேன்...”
அடுத்த பத்தாவது நிமிடம் மஞ்சு, வினோதினி, குழந்தையுடன் ஆட்டோவில் கிளம்பினார்கள்.
வினோதினி அமைதியாக இருக்க, மஞ்சுவே மெல்லியக் குரலில் பேச்சை தொடங்கினாள்...
“வினோ, என்ன தான் நடக்குது??? என்னன்னு சொல்லுங்க...”
“உனக்கு ஆல்ரெடி தெரிஞ்சிருக்கும் மஞ்சு...”
“ப்ச்... வினோ... அப்படி இருந்தா நான் உங்க கிட்ட என்னன்னு கேட்டுட்டு இருக்க மாட்டேன்... யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை... நீங்க சொல்லுங்க... நான் நடந்ததை உங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுக்க விரும்புறேன்...”
வினோதினியின் முகம் தெளிவுப் பெற்றது...
“நான் அவர் கிட்ட தனிக் குடித்தனம் போகலாம்னு சொன்னேன்... அவருக்கு விருப்பமில்லை... அதெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டார்... இது தான் ஆக்ச்சுவல் ப்ராப்ளம்...”
மஞ்சு விநோதினியையே பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தாள்.
“நான் அப்படி தனியா போகலாம்னு சொன்னதை நீ தப்புன்னு நினைக்குறீயா மஞ்சு?”
“தப்பா, சரியான்னு சொல்றதை விட, ஏன் அப்படின்னு தான் எனக்குப் புரியலை... ஜோதியும்