(Reading time: 9 - 17 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

இருந்தான்...

  

அவளுக்காக பார்த்து பார்த்து ஏற்கனவே அனைத்தையும் ஏற்பாடு செய்திருந்தவன், அவளுடன் இருந்த நாட்களில் அவளை கைகளில் வைத்து தாங்கினான் என்று சொன்னால் அது அதிகம் இல்லை...

  

அந்த சில நாட்களை மஞ்சு மறக்கவே முடியாது... அதன் பிறகு...

  

“ஹாய் மஞ்சு...” என்ற குரல் மஞ்சுவின் எண்ண ஓட்டத்தை தடை செய்தது...

  

மஞ்சு திரும்பிப் பார்த்தாள். அங்கே கௌரவ் நின்றிருந்தான்...

  

“ஹாய் கௌரவ்,” என மரியாதை நிமித்தம் வாழ்த்திய மஞ்சுவின் கைகள் தானாகவே அவள் அணிந்திருந்த ஷர்ட்டை சரி செய்தது... இயல்பாக செய்வதுப் போல காலர் பகுதியை மேலே இழுத்து விட்டவள், அதை கௌராவ் கவனிக்காத விதத்தில்,

  

“மீட்டிங்குக்காக வந்தீங்களா கௌரவ்?” என்ற கேள்வியும் கேட்டாள்.

  

“யா மஞ்சு...” என பதிலளித்து, அங்கிருந்த காலி நாற்காலியில் அமர்ந்தான் கௌரவ்.

  

மஞ்சுவிற்கு என தனியாக அங்கே க்யூப் இல்லை... இந்திய கம்பெனிகளில் இருந்து அங்கே ப்ராஜக்ட்டில் வேலை செய்யும் ‘கான்ட்ராக்டர்’ களுக்காக நீளமான அறை ஒன்றில் தடுப்புகள் வைத்து பல சீட்டுகள் அமைத்திருந்தார்கள். மஞ்சுவின் அருகே இருக்கும் இருக்கைகளில் அவளை போல அவள் கம்பெனியில் இருந்தும் மற்ற கம்பெனிகளில் இருந்தும் பணிப் புரியும் சிலரின் இருக்கை இருந்தது.

  

மாலை நேரம் என்பதால் பெரும்பாலனவர்கள் கிளம்பிச் சென்றிருந்தார்கள்...

  

மனதில் ஓடிய எரிச்சலைக் காட்டிக் கொள்ளாமல் கௌரவை பார்த்தாள் மஞ்சு... கடத்த சில மாதங்களாக கௌரவ் அவளின் மேனேஜராக இருக்கிறான். இதற்கு முன் இருந்த மேனேஜர் ஷசாந்த் வேலையில் அவளுக்கு மேனேஜர், அவ்வளவு தான்! அதை தான் அவனைப் பற்றி

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.