(Reading time: 9 - 17 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

“ஓகே, சீ யூ டுமாரோ..” என சொல்லி விட்டு கிளம்பினான் கௌரவ்.

  

கௌரவ் போனதும் மஞ்சு அசோக்கை பார்த்தாள்.

  

“எதுக்கு இப்போ என்னை இப்படி பார்க்குற மஞ்சு? நாம எல்லாம் ஒரே ஃபேமிலி போல. உனக்கு கம்பெனி இல்லைன்னு எல்லாம் பாட்டு பாடாதே... என் ஒய்ஃப் வரா... நம்ம ப்ராஜக்ட்ல இருந்து எல்லோரும் வராங்க... நீ வரலைனா நல்லா இருக்காது...”

  

அசோக்கை குறை சொல்ல மஞ்சுவிற்கு மனம் வரவில்லை... அவன் அவளுக்காக யோசித்து சொல்கிறான் என்பது அவளுக்கே தெரியும்...

  

பொதுவாக அசோக் போன்றவர்களை மட்டுமே பரிச்சயமாக இருந்தவளுக்கு, கௌரவ் போன்றவர்களும் இருக்கிறார்கள் என்பது இப்போது தானே தெரிய வருகிறது...!

  

லுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வந்தப் பிறகும் மஞ்சுவின் மனம் அலைப்பாய்ந்துக் கொண்டே இருந்தது...

  

மனோஜிற்கு மீண்டும் போன் செய்தாள்... ஹுஹும் பதிலே இல்லை...

  

முக்கியமான மீட்டிங்குகள் இருப்பதாக மனோஜ் முன் தினமே சொல்லி இருந்தான்... இருந்தாலும் அவன் ஒரு மெசெஜாவது அனுப்பி வைத்திருக்கலாம்...

  

பழைய யாஹூ மெசெஞ்சர் நாட்களை ஏக்கத்துடன் அவளின் மனம் யோசித்தது...!!!!

  

திடீரென அழைப்பு மணி ஒலித்தது...

  

மஞ்சு மட்டும் தனியாக அந்த அபார்ட்மென்ட்டில் தங்கி இருந்தாள்... யாரையும் அவள் இப்போது எதிர்பார்த்திருக்கவில்லையே...??

  

கேள்வியுடன் கதவில் இருந்த சிறுக் கண்ணாடி வழியே பார்த்தவள் வாயடைத்துப் போனாள்!

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.