தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 21 - பிந்து வினோத்
மஞ்சுவின் ஆராய்ச்சியை புரிந்துக் கொண்டு,
“பொதுவா சொல்றேன் மஞ்சு,” என்றான் மனோஜ்.
“கௌரவ் வீட்டுல இருந்தப்போ அப்படி செல்லம் கொஞ்சிட்டு இருந்தீங்க? அதுவும் கூட உங்க பார்ட்டி எட்டுகட் (etiquette) தானா?!!!!?”
“அந்த பேச்சை விடு, நான் சொன்ன கேள்விக்கு வா. என்னோட சிக்காகோ வந்துரு pbs. இங்கே நீ தனியா இருக்குறது எனக்கு அன்-ஈஸியா இருக்கு. நீ எவ்வளவு பாதுகாப்பா இருக்க நினைச்சாலும் கெட்ட புத்தி இருக்குறவங்க நிறைய பேர் இருக்குறாங்க. நான் இருக்கும் போதே சில சமயம் சில பேர் உன்னை பார்க்குற பார்வையை பார்த்தா கோபமா வருது.”
மனோஜின் பேச்சு மஞ்சுவை யோசிக்க வைத்தது...
கௌரவின் பார்வை பற்றி தெரிந்ததால் உடனே வேலையை விட்டு வர சொல்வானோ? என்ற கேள்வி மஞ்சுவை குடைந்தது... மனோஜிடம் எலலாவற்றையும் அப்படியே ஒப்பிக்க வேண்டும் என்று இல்லையே...
மஞ்சு உடனே மறுமொழி சொல்லாமல் தன்னை நிதானித்துக் கொள்ள சில வினாடிகள் எடுத்துக் கொண்டு, பொறுமையாக பேசினாள்.
“இதெல்லாம் நீங்களே கவனிக்கும் போது நான் கவனிக்காம இருப்பேனா மனோஜ்? தினம் தினம் பஸ்ல, ட்ரெயின்ல, ஏன் நடந்துப் போற பொண்ணுங்க கூட இதை விட அதிகமான பிரச்சனைகளை தினமும் பேஸ் செய்றாங்க. அதுக்காக எல்லோரும் ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு போனா சரியா போயிடுமா? சிகாகோலேயும் அது போல மனுஷங்க இருக்க தான் செய்வாங்க. அப்போ என்ன செய்றது, இரண்டுப் பேருமா வேற இடத்துக்கு போக முடியுமா? நான் தனியா போய் படிச்சிருக்கேன், தனியா வேலைக்கும் போயிருக்கேன், நானே மேனேஜ் செய்துப்பேன்...” என்றாள்.
மனோஜால் மஞ்சுவின் பதிலை முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால்