தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 25 - பிந்து வினோத்
“உனக்கு தான் நான் நன்றி சொல்லனும் மஞ்சு,” என்று மஞ்சுவிடம் ரகசியமாக சொன்னான் கார்த்திக்.
திருமண வரவேற்ப்பிற்கு என மாப்பிள்ளை கெட்டப்பில் இருந்தவனை பெருமையுடன் பார்த்த மஞ்சு,
“சொல்லனும் சொல்லனும்னு சொல்லிட்டு இருக்காம, சீக்கிரமா சொல்லி முடிச்சிடு...” என்றாள் நட்புடன்.
“அப்படி ஈஸியா சொல்லி முடிக்குற உதவியா நீ செஞ்சிருக்க... ஜோ சொன்னா, உனக்கும் அவளுக்கும் ஒத்து வராதாமே... எனக்கு அது தெரியாது... நல்ல வேளை நீ வில்லியா மாறாம போனீயே... நன்றி ம்மா...”
“நான் எப்போவும் ஹீரோயின் மெட்டீரியல், கார்த்திக்! இதை நான் சொல்லியே ஆகனும்! ஜோதி இப்போ ரொம்ப மாறிட்டா. அவளுடைய நடவடிக்கைகளில் பயங்கர மெச்சூரிட்டி தெரியுது... நல்லா அட்ஜஸ்ட் செய்துக்குறா...”
“அவ எப்போவுமே அப்படி தான், மஞ்சு...”
“டேய் ஜிங் ஜாங் போடாதே! எனக்கு தான் ஜோதியை பத்தி உன்னை விட அதிகமா தெரியும்...”
“அப்படி என்ன தெரியும்? சாதனா கல்யாணம் நிக்க ஜோதி செஞ்ச வேலையையா சொல்ற?”
வெகு சாதாரணமாக கேட்ட நண்பனை ஆச்சர்யத்துடன் பார்த்தாள் மஞ்சு...
“உன் சர்ப்ரைஸ் எனக்குப் புரியுது மஞ்சு... ஜோதியே இதை என் கிட்ட சொன்னா... ரொம்ப வருத்தப் பட்டா... அவ ஏன் அப்படி செஞ்சான்னு தெரியுமா?”
ஜோதி இதை கார்த்திக்கிடம் பகிர்ந்திருப்பதை எண்ணி வியந்துக் கொண்டே,