தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 27 - பிந்து வினோத்
மஞ்சு பிஸியாக பேக் செய்துக் கொண்டிருக்க, அவளுக்கு வினோதினி தொடங்கி, பத்மா, நிர்மலா வரை அனைவரும் உதவிக் கொண்டிருந்தார்கள்.
மறுநாள் விடிகாலை கிளம்பும் விமானத்தில் அவர்கள் பயணம் செய்ய வேண்டும் என்பதால், பயண ஆயத்தங்கள் சீராக நடந்துக் கொண்டிருந்தது!
“அத்தை, அன்னைக்கு வெண்டைக்காய் போட்டு ஒரு குழம்பு செய்தீங்களே, அது அவருக்கு ரொம்ப பிடிச்சிருந்தது, எப்படி செய்யனும்?”
மஞ்சுவின் கேள்வி நிர்மலாவை ஆச்சர்யப்படுத்தியது.
“சொல்றேன் மஞ்சு! உங்க கல்யாணம் நடந்தப்போ நான் இப்படி நினைக்கலை. ஆனால் இப்போ மனோஜை பத்தி நான் கவலைப் படுறதே கிடையாது, அவனை நீ பார்த்துக்குறேன்னு தைரியம் இருக்கு. மனோஜ் எதை சரியா செய்தானோ இல்லையோ, உன்னை கரக்ட்டா கண்டுப்பிடிச்சிருக்கான்! ஜோதி கல்யாணமும் முடிஞ்சிடுச்சு, இனி உங்களுக்கும் ஒரு குழந்தை பிறந்துட்டா, நான் இன்னொரு பேரனையோ, பேத்தியையோ கூட பார்த்திருவேன்.”
நிர்மலா பேச்சின் முதல் பகுதியைக் கேட்டு ஈ என அனைத்து பற்களும் தெரிய மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மஞ்சு, இரண்டாவது பகுதியை அவள் சொன்னதும் முகத்தை மாற்றிக் கொள்ளாமல் வைக்க போராட வேண்டி இருந்தது.
மகளின் முகத்தை பார்த்து பத்மாவிற்கே அது புரிந்தது. இருந்தாலும் வாய்ப்பை தவற விடாமல்,
“நானும் இவக் கிட்ட சொல்லிட்டேன். சரியாவே பதில் சொல்ல மாட்டேங்குறா. நீங்க அவர் கிட்டேயும் சொல்லிப் பாருங்களேன்! முன்னாடியாவது இரண்டுப் பேரும் வேலை வேலைன்னு இருந்தாங்க. இப்போ இவ சும்மா தானே இருக்கா!” என்றாள் தன் கோபத்தையும் மறைமுகமாக வெளிபடுத்திக் கொண்டே...
“யாரு மனோஜ் கிட்டேயா? அவன் கிட்டேயும் சொல்றேன். சென்னை வந்ததுல இருந்து